india

img

பாலியல் புகாருக்குள்ளான சிவசங்கர் பாபா கைது

பாலியல் புகாருக்குள்ளான சிவசங்கர் பாபா இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர பாபா மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.  இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. 
இந்நிலையில் சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சான்றுகளையும் புகைப்படங்களையும்  அவரது ஆதரவாளர்கள் பரப்பினர்.  ஆனால் டேராடூன் மருத்துவமனையில் இருந்து வசங்கர் பாபா தப்பித்து சென்றார்.
இந்தநிலையில்தான் டெல்லியில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதைதொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை சென்னைக்கு அழைத்து வர உள்ளதாகவும், சென்னையில் அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

;