india

img

மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப்பதிவு செய்க...   மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு...

புதுதில்லி:
மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று  மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்துகிறபோது, அவர்களின் மன உறுதியைக் குலைத்து விடும், பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படுத்திவிடும். இது சுகாதார பாதுகாப்பு முறையை மோசமாக பாதித்து விடும். எனவே மருத்துவர்கள்  மீது தாக்குதல் நடத்துகிறவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்து துரித விசாரணை நடத்த வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;