india

img

மோடி அரசை வீழ்த்த விவசாயிகள் போராட்டத்தில் தலைவர்கள் அழைப்பு....

1ம் பக்கத் தொடர்ச்சி.... 

மோசமான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.இந்த கொடூர ஆட்சிக்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு வணிகர்கள், சிறு குறு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரையும் திரட்டி போராட வேண்டும். விவசாயிகளின் இந்த ஒற்றுமையையும் போராட்ட உணர்வையும் பாராட்டுகிறேன் என்றார்.

இறங்கிவந்துள்ள பாஜக அரசு 
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், இந்தியவரலாற்றில் இல்லாத வகையில், சுதந்திரத்திற்கு பிறகு யாராலும் நடத்த முடியாத ஒரு போராட்டத்தை இந்திய விவசாய வர்க்கம் கடந்த 8 மாதகாலமாக நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த சட்டத்தை இயற்றியவர்களே இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். வேளாண் சட்டம் குறித்து மக்களவையிலும், மாநிலங்களவை யிலும் பேசவே மாட்டோம் என்று கூறியஅரசு தற்போது வேளாண் சட்டங்கள் குறித்தும் பேசுவோம் என்ற அளவிற்கு இறங்கி வந்திருக்கிறார்கள். வெயிலையும் பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக விவசாயிகள் நடத்திவரும்  ஒன்றுபட்ட போராட்டம்தான் அதற்கு காரணம்.

உறுதிமிக்க போராட்டம் 
யமுனையின் வெள்ளப்பெருக்கில் ஆயிரமாயிரம் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் யமுனையின் வெள்ளப் பெருக்கு விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டத்தை எதுவும்செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. 3 வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் போராட்டத்தில் செங்கொடி இயக்கமும், விவசாயிகள் சங்கமும், இந்திய விவசாயிகளும் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் இருந்து பங்கேற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

கொள்ளையர்களுக்கு எதிரான போராட்டம்
சிவதாசன் எம்பி. பேசுகையில், தில்லியில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் ஒன்றிய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல  இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளை அடிக்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரானதாகும் என்று குற்றம்சாட்டினார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோர ரூபாய் கடன் தள்ளுபடி அளிக்கும் மோடி அரசுக்கு சாமானிய ஏழை விவசாயிகளைப் பற்றி கவலை இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை கூடகொடுக்க வக்கில்லாத மோடி அரசைநாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் விவசாயி களோடு கரும்பு, முந்திரி காப்பிக்கொட்டை விவசாயிகள் என பலதரப்பட்ட விவசாயிகளும் இணைந்திருக்கிறார்கள். இந்திய நாட்டின் மகத்தான முழக்கமாக விளங்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மகத்தான கோஷத்தில் நாம் ஒன்றிணைந்து மோடி அரசை வீழ்த்துவோம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.இந்திய ஒன்றியத்தின் பண்பாட்டைச் சீரழிக்கும் மோடி அரசின்மூன்று மசோதாக்களை வெறும் 3 மணிநேர விவாதத்தில் மக்களவையில் நிறைவேற்றிய வெட்கக்கேடு நடந்தேறி யுள்ளது. இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும்  சர்வாதிகாரமும் நடந்தேறியுள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து களம் காண விவசாயிகள் ஒன்றிணைய வேண்டும் என சிவதாசன் எம்பி  கேட்டுக்கொண்டார்.

கோரிக்கை மனு அளிப்பு
முன்னதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்  ஹன்னன்முல்லா   தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்முடிவில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் பெ.சண்முகம், பொருளாளர் கே.பி.பெருமாள், துணைத் தலைவர் டி.ரவீந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று கோரிக்கை  மனு அளித்தனர்.

படம், செய்தி : ம.மீ.ஜாபர்

;