india

img

குமரி எம்.பி.,  விஜய் வசந்த் உள்பட 4 பேருக்கு பதவிப் பிரமாணம்.....

புதுதில்லி:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 அன்று தொடங்கியது. மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் தமிழில் பதவியேற்றுக் கொண்டுள்ளார். 

இதனிடையே மாநிலங்களவை பிற்பகல் 12.24 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது.

;