india

img

கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 340 தொழிலாளர் பலி.... மத்திய அரசு தகவல்....

புதுதில்லி:
கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தப்படுத்திய 340 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியாகியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் நிகழ்ந்த உயிர்ப்பலிகள் இதுவாகும். பலி எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. ஒருவர்எழுப்பிய கேள்விக்கு மத்தியசமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அளித்த பதிலில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அவர் அளித்த பதிலில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வரை 5 ஆண்டுகளில் 19 மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும்கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்த போது, 340 பேர் உயிரிழந்திருப்பதாக அமைச்சர் தாவர்சந்த்கெலாட் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்ச மாக 52 பேரும்அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 43 பேர் பலியாகியிருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தில்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பலியாகியிருப்பது  மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. 

இதற்கு, கழிவுநீரை அகற்ற போதிய அளவில் இயந்திரங்களின் பயன்பாட்டை அரசு நடைமுறைக்கு கொண்டு வராததே காரணம்  என்று தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

;