india

கொரோனா தடுப்பூசி அமெரிக்காவை முந்தியது இந்தியா...

புதுதில்லி:
உலகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுகின்றன. அந்த வகையில்தொற்றிலிருந்து காத்துக் கொள்ளவும், கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளி லிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், உலக அளவில் அதிகமாக தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மக்கள்தொகையின் அடிப்படையில், அதிக அளவில்கொரோனா தடுப்பூசியை செலுத்திய முதல்நாடுகளின் விவரத்தை ஒன்றிய சுகாதார அமைச்சகம் திங்களன்று வெளியிட்டுள்ளது. புதிய கொரோனா தடுப்பூசி திட்டம் 2021 ஜூன் 21 ஆம் தேதி தொடங்கியது. நாட்டில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியை கடந்துள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஞாயிறன்று 32 கோடியை கடந்தது. 32,36,63,297 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.உலக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இதுவரை அமெரிக்க முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து அமெரிக்காவை இந்தியா 2 ஆம் இடத்துக்கு தள்ளியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 32,33,27,328 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பிரிட்டனும், நான்காவது இடத்தில் ஜெர்மனியும் உள்ளன.பிரான்ஸ் 5 ஆவது இடத்திலும் இத்தாலி  6 ஆவது இடத்திலும் உள்ளன. இவ்வாறுஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள் ளது.

;