india

img

ராணுவ ஆள்சேர்ப்பில் முறைகேடு.... வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு.....இந்திய ராணுவம் முடிவு.....

புனே:
இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பில் நடைபெற்ற முறைகேடு வழக்கை சிபிஐயிடம்ஒப்படைக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.இந்திய ராணுவத்திற்கு தகுதியுள்ள வீரர்களை சேர்ப்பதற்கான பொது நுழைவுத்தேர் வில் வினாத்தாள் கசிந்தது எனகுற்றச்சாட்டு எழுந்தது.  இதுகுறித்து  புனே நகர காவல்துறையினர் மற்றும் ராணுவ நுண்ணறிவு அமைப்பினர் இணைந்து கூட்டாக விசாரணை மேற் கொண்டனர்.

இந்த முறைகேட்டில், முன் னாள் ராணுவ அதிகாரிகளும் தொடர்பில் உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.  அவர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.  தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு ராணுவத் தில் பணி உறுதி என்ற வாக்குறுதியின்படி ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் தரும்படிகேட்டுள்ளனர்.ஒரு சிலர் தேர்வுக்கு முன்பேரூ.1 லட்சம் முன்பணம் கொடுத்துவிட்டனர். பணி நிரந்தரம் ஆனவுடன் மீதமுள்ள ரூ.1 லட்சம் பணம்தர முடிவு செய்திருந்தனர் என்பதுவிசாரணையில் தெரிய வந்துள் ளது.இதுபற்றி புனே நகர காவல்துறை இணை ஆணையர்ரவீந்திரா ஷிஸ்வே கூறுகையில்,இந்த வழக்கில் 2 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன.  10 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  வழக்கு விசாரணையில், ராணுவத்தில் பணிபுரிந்து வரும் 2 அதிகாரிகள் மற்றும் 2 முன்னாள் ராணுவ அதிகாரிகள் உள்பட7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைக்காக அழைத் துச் செல்லப்பட்டவர்களில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் உள்ளனர்.  அவர்களில் ராணுவபயிற்சி மையங்கள் நடத்தியவர்களும் உள்ளனர். அவர்களுக்குஎப்படி ராணுவ ஆள்சேர்ப்புக் கான வினாத்தாள் கிடைத்தது என்பது குறித்து  விசாரணை நடத்தி வருகிறோம்.  இதில் வேறுயாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.இந்நிலையில், இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணுவத்திற்கு தகுதியான நபர்களைதேர்வு செய்யும் ஆள்சேர்ப்பு நடைமுறையில் ஊழல் நடைபெற்றுள் ளது என்பதனை இந்திய ராணுவம் எந்த அளவிலும் சகித்துக்கொள்ளாது.  அதனை ஏற்று கொள்ள முடியாது.ராணுவ நுண்ணறிவு அமைப்புகளின் அதிரடி நடவடிக்கையின் அடிப்படையில், ராணுவ தேர்வு மையம் ஒன்றில் ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறையில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான சாத்தியம் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  இதுபற்றிய விசாரணையில் பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.  எனினும் இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம்ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
 

;