india

img

தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 70.75 கோடியாக உயர்வு.....

 புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 70 கோடியைக் கடந்துள்ளது. மேலும் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘‘கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 37 ஆயிரத்து 875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 608 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 1.18 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 369 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கேரளாவில் 189 பேரும், மகாராஷ்டிராவில் 86 பேரும் உயிரிழந்தனர். ஒரே நாளில் 17 லட்சத்து 53 ஆயிரத்து 745 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஏறக்குறைய
70.75 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;