india

img

18 வயது பிரிவினருக்கு 188 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் தேவை.... மாநிலங்களவையில் சுகாதார அமைச்சர் தகவல்....

புதுதில்லி:
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்கு  188 கோடி கொரோனா தடுப்பூசிடோஸ்  தேவைப்படுவதாக மாநிலங்களவை யில் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித் தார்.  

நாடாளுமன்ற மாநிலங்களவையில், “நமது நாட்டில் தேவைப்படுகிற தடுப்பூசிகளை தயாரிக்கிற திறன், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கிறதா?” என  கேள்வி எழுப்பப்பட்டது.இந்த கேள்விக்கு சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர்  பாரதி பிரவிண் பவார் எழுத்துமூலம் அளித்த பதிலில், 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் மக்கள்தொகை 94 கோடி ஆகும். எனவே இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு 188கோடி ‘டோஸ் ’ தடுப்பூசி தேவைப்படு கிறது. எதிர்காலத்தில் ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசியின் பயன்பாடுகளுக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்படுமானால் இந்த எண்ணிக்கை குறையும்.  அடுத்த ஆண்டு ஜனவரி-டிசம்பர் இடையே நமது நாட்டில் 187 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  தற்போது உருவாக்கப்பட்டு வருகிற தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் கிடைக்கக்கூடும். எனவே தகுதியான மக்க
ளுக்கு மேலும் தடுப்பூசிகள் வரும் என்று தெரிவித்தார்.

மற்றொரு பதிலில், கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.600, கோவாக்சின் தடுப்பூசி ரூ.1,200 என்ற விலையில் தனியார் மருத்துவமனைகள்  கொள்முதல் செய்யலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஸ்புட்னிக்  தடுப்பூசியின் விலை ரூ.948 ஆகும்.தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு சேவைக்கட்டணம் ரூ.150 என அரசு நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாகவே தொடர்ந்து தடுப்பூசி போடப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி கொள்முதலுக்கான விலையை தடுப்பூசி உற்பத்தியாளர்கள் நிர்ணயம் செய்துகொள்ளலாம். ஆனால் அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். நாட்டில் தற்போது கிடைக்கும் கொரோனா தடுப்பூசி களில் வி.வி.எம். என்று சொல்லப்படுகிற தடுப்பூசி வியால் மானிட்டர்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

;