india

எடியூரப்பா ஊழல் பேர்வழி... கன்னடர்கள் மோசமானவர்கள்... ஆபாச வீடியோவில் பாஜக அமைச்சர் வாக்குமூலம்....

பெங்களூரு:
பாஜக-வைச் சேர்ந்த கர் நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி (60), இளம்பெண் ஒருவருக்கு அரசுவேலை வாங்கித்தருவதாக ஆசைகாட்டி அவருடன் பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்ட விவகாரம் கர்நாடகத்தில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. 

வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் கையும் களவுமாக சிக்கிக் கொண்டதால், வேறுவழியில்லாமல் அவர் தனதுஅமைச்சர் பதவியை ராஜினாமாவும் செய்துள்ளார்.ஆனால், பிரச்சனை இத்துடன் முடிந்து விடவில்லை. இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது, அமைச்சர்ஜர்கிஹோலி தன்னையறியாமல் பல உண்மைகளை உளறிக்கொட்டியது, பாஜகவுக்கு புதியதலைவலியாக மாறியுள்ளது.விடுதியில் நெருக்கமாக இருந்தபோது, இளம்பெண்ணுடன் அமைச்சர் பேசியது ஆடியோவாக வெளியாகி உள்ளது. அதில், “கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒரு ஊழல் பேர்வழி” என்று ரமேஷ் ஜர்கிஹோலி கூறியுள்ளார். கன்னட மக்களையும்அவர் மோசமான வார்த்தையில்திட்டியுள்ளார்.

“பெல்காம் பகுதியில் மராத்தியர்களும் கன்னடர் களும் நிறைய சண்டை போட்டுக்கொள்கிறார்களே...” என்று இளம்பெண் கேள்வியெழுப்ப, அதற்குப் பதிலளித்த ரமேஷ்ஜர்கிஹோலி, “மராத்தியர்கள் நல்லவர்கள். ஆனால்..” என்றுஇழுத்து,  கன்னடர்களை அசிங்கமான வார்த்தையில் திட்டியுள் ளார். “கன்னடர்களுக்கு வேறு வேலையே கிடையாது” என்றும்விமர்சித்துள்ளார். அத்துடன், “காங்கிரஸ் தலைவர் சித்தராமையா நல்ல மனிதர்” என்றும்,ஆனால் தற்போதைய முதல்வர்“எடியூரப்பா நிறைய ஊழல் செய்துள்ளார்” என்றும் அவராகவே வாக்குமூலம் அளித்துள்ளார். “அடிக்கடி  தில்லிக்குசெல்கிறீர்களே.. உங்களுக்கு முதல்வராக வாய்ப்பு இருக்கிறதா?” என்று அந்தப் பெண் கேட்டதற்கு, “பிரகலாத் ஜோஷிதான் முதல்வராக வருவார்” என்றும் ஜர்கிஹோலி தெரிவித் துள்ளார்.

;