உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவரை டிக்கெட் பரிசோதகர் மற்றும் மற்றொரு ஆண் இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேராடுன் - சுபேதர்கஞ்ச் விரைவு ரயிலில் கே.என்.சிங் என்பவர் பயண டிக்கெட் பரிசோதகராக இருந்துள்ளார். இரவு 10 அளவில் 33 வயது இளம்பெண் ஒருவரை அங்குள்ள மற்றொரு பயணியுடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த வழக்கில் டிடிஆர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்,இரண்டாவது குற்றவாளி தப்பியோடிவிட்டதாகவும் ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது