india

img

உ.பி. மாநிலத்தில் இலவச சீருடை, காலணி நிதியில் ஊழல்.... போலியாக மாணவர்களை சேர்த்து பல கோடி ரூபாய் கொள்ளை....

லக்னோ:
பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேசத்தில், ராமர் கோயிலுக்கான நிதி துவங்கி, பசுக்களுக்கு சரணாலயம் நடத்துவதற்கான நிதி வரைஅனைத்திலும் ஊழல் புரையோடிப் போயிருக்கிறது.

அந்த வகையில், புதிதாக- போலியான மாணவர் சேர்க்கையைக் காட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக் கான இலவச சீருடை, காலணி வழங்குவதற்கான நிதியிலும் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.தலைநகர் லக்னோவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக திடீர் ஆய்வுமேற்கொள்ளப்பட்டு உள்ளது. அப்போது, மாணவர்களின் ஆதார் அட்டையை சரி பார்த்தபோது பலஅதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.வழக்கமாக, உ.பி. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குறைவு என்பதால் சேர்க்கைக்கு என உச்சவரம்பு நிர்ணயிக்கப் படவில்லை. இதனை சாக்காகவைத்து, பெரும்பாலான பள்ளிகளில்போலியாக மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. உத்தரப்பிரதேச பள்ளி மாணவர் களுக்கு சீருடை, குளிருடை, காலுறைமற்றும் காலணி, புத்தகப் பை எனஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1200 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கான நிதி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றன. இந்நிலையில்தான் போலியாக மாணவர் சேர்க்கையைக் காட்டி நிதிமுறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஊழல் தெரிய வந்த பின்னர், உத்தரப் பிரதேச தொடக்கப் பள்ளிகள் இணையதளத்தில், லக்னோ மாவட்டத்தில் மட்டும் 22.95 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 15.8 லட்சம் என ஒரேயடியாக 7 லட்சம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைக்கு உட்பட்ட குறிப்பிட்ட இரண்டு பள்ளிகளில் மட்டும் 4,000 போலி மாணவர் சேர்க்கைகள் நடைபெற்றிருப்பதுமுதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. மீதமுள்ள பல பள்ளிகளில் போலி மாணவர் சேர்க்கை சில ஆயிரங்களாக இருப்பதும் தெரியவந்துள் ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களின் தொடக்கப் பள்ளி மாணவர் சேர்க்கைகளும்  தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதிலும்பல கோடி ரூபாய் ஊழல் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒரே ஆசிரியர், உ.பி. மாநிலத்தின்பல அரசுப் பள்ளிகளில் பணியாற்றுவது போல் கணக்கு காட்டி பல லட்சம்ரூபாய் ஊழல் நடந்ததும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

;