ஞானவாபி மசூதி பெயர்ப் பலகையில் மசூதிக்குப் பதிலாக கோவில் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடியோ இணையத்தில் பரவியதால் சர்ச்சை எழுந்ததுள்ளது.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள ஞயானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை செய்து வழிபாடு செய்யலாம் என வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு நேற்று அளித்துள்ளது.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து இந்துமதத்தைச் சார்ந்த சிலர் மசூதிக்கு பதிலாக கோவில் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காட்சியால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த தீர்ப்பு வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991க்கு முரணானது. நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பு விளைவாக ஞானவாபி மசூதி எனும் பெயர்ப் பலகையை ஞானவாபி கோவில் என மாற்றுகின்றனர்.
பெயர்ப் பலகையை மாற்றுபவர்கள் மசூதியை மாற்ற மாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. அரசியலும் நீதித்துறையும் தவறாக கை கோர்க்கும் பொழுது மதச்சார்பின்மை காணாமல் போய் விடுகிறது விமர்சனங்கள் எழுந்துள்ளன.