india

img

பாஜக எம்எல்ஏ-வால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்... குழந்தையின் பராமரிப்புக்கு ரூ. 60 ஆயிரம் தர கோரிக்கை....

டேராடூன்:
பாஜக எம்எல்ஏ பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கி யதால் குழந்தை பெற்ற பெண், அந்தக் குழந்தையின் பராமரிப்புச்செலவை, எம்எல்ஏ-தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டம் துவாரசத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் மகேஷ் நேகி. வயது54. இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.இந்நிலையில், பாஜக எம்எல்ஏ மகேஷ் நேகி-க்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அந்தப் பெண், தனது குழந்தையின் தந்தை மகேஷ்நேகிதான் என்பதை நிரூபிக்கஅவருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், மகேஷ் நேகி உயர் நீதிமன்றத்தை நாடி, டிஎன்ஏ சோதனைக்கு தடை பெற்றார்.இந்நிலையில் தனது குழந்தையின் பராமரிப்புச் செலவுக்காக, பாஜக எம்எல்ஏ மகேஷ் நேகி, மாதம் ரூ. 60 ஆயிரம் தர வேண்டும் என்று புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து பதில் அளிக்குமாறு எம்எல்ஏ-வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

;