india

img

மேற்குவங்கம்: புகழ்பெற்ற பங்களாவில் தீ விபத்து !

மேற்குவங்கத்தில் புகழ்பெற்ற பங்களா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

மேற்குவங்க மாநிலம், அலிபூர்த்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜல்தவாரா தேசிய பூங்காவில் புகழ்பெற்ற ஹோலாங் வன பங்களா உள்ளது. ஒற்றைக்கொம்பு கண்டா மிருகங்களுக்கு பெயர்பெற்ற மூன்று மாடிகள் கொண்ட இந்த பங்களாவில் நேற்று இரவு தீ விபத்து நேரிட்டது.

உடனே தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பங்களா முழுவதும் மரப்பலகையில் செய்யப்பட்டிருந்தால் தீ மளமளவென பரவி கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமனாது. இதனால் தீயை அணைப்பதில் வீரர்களுக்கு சவாலாக இருந்தது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.