வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என இந்தியா டுடே- சி வோட்டர் நிறுவனம் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பின்பும் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் கருத்துக்கணிப்பு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா டுடே- சி வோட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்.திமுக கூட்டணி 47 சதவிகித வாக்குகளை பெறும். அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது.கடந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் என கணித்துள்ளது.
கேரளாவில் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று இந்தியா டுடே-சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.