india

img

பினிஷிங் சரி இல்லாம போச்சே - ஒரே நாளில் ஓகோ என வைரலான திருடர்   

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் திருடச் சென்ற இடத்தில் இளைஞர் சுவற்றின் ஓட்டையில் மாட்டிக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜடிமுகடி கிராமத்தில் அமைந்துள்ள அம்மன் கோவில் ஒன்றில் பாப்பாராவ் என்ற இளைஞர் திருடச்சென்றுள்ளார். கோவில் நகைகளைத் திருடி விட்டு அங்கிருந்து தப்பிப்பதற்காகக் கோயிலிலிருந்த ஓட்டை வழியாக வெளியே செல்ல முயற்சித்துள்ளார். 

அப்போது அவருடைய பாதி உடல் மட்டும் கோயிலுக்கு வெளியே சென்ற நிலையில், மீதி உடல் பகுதி உள்ளே சிக்கிக்கொண்டது. இவ்வாறு சிக்கிகொண்ட நிலையிலும், விடியும் வரை தப்பிக்க தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்துள்ளார். 

பின்னர் அங்கு வந்த பொதுமக்கள் தப்பிக்க முயற்சித்து கலைப்படைந்திருந்த அவருக்கு தண்ணீர் கொடுத்து, பிறகு அவரை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.