சென்னை,அக்டோபர்.18- இந்தி மாதம் கொண்டாட வற்புறுத்தக் கூடாது எனக் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.