மத்தியப்பிரதேசத்தில் கணவரை இழந்த அரச குடும்பத்துப் பெண், கோவில் கருவறைக்குள் செல்ல முயன்றபோது, அவர் கீழே தள்ளப்பட்டு வெளியே துரத்தப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் பன்னா எனுமிடத்தில் பாரம்பரியமாகக் கிருஷ்ணர் கோவிலில் மன்னர் குடும்பம்தான் முதலில் வழிபடுவர். இந்த ஆண்டு மன்னர் இறந்துவிட்டதால் அவரது குடும்பத்துக்கு சில அரசியல்வாதிகளின் அணுகுமுறை காரணமாக கோவிலுக்கு வர அனுமதி மறுத்தனர். தனது குடும்பத்தின் உரிமையை நிலைநாட்ட வந்த மன்னரின் மனைவி அதாவது மகாராணி கருவறைக்குள் செல்ல முயன்றதால், அவர் கீழே தள்ளப்பட்டு வெளியே துரத்தப்பட்டார். பின்னர், அப்பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.