புதுதில்லி, மே 31 - அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை வரு டாந்திர பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் பேசும் மரி யாதையை வென்ற மூன்று மாணவர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி அமெரிக்க மாணவி ஸ்ருதி குமார், தனது உரையின் போது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய 13 இளங்கலை மாணவர்களுக்கு பல்கலை நிர்வாகம் பட்ட மளிக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தான் பயின்ற பல்கலைக்கழ கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தெரியாத சக்தி” என்ற தலைப்பில் பேச இருந்த அவர், அதற்காக தயார் செய்திருந்த உரையிலிருந்து விலகி.. தனது கவுனில் இருந்து ஒரு துண்டு காகிதத்தை வெளியே எடுத்துப் பேசினார். “பாலஸ்தீன மக்களுக்காக ஹார்டு வேர் பல்கலை மாணவர்கள் பேசு கின்றனர்.
பல்கலை ஆசிரியர்கள் பேசு கின்றனர். ஹார்வர்ட் நிர்வாகமே.. நீங்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேசுகிறீர்களா?” என ஸ்ருதி குமார் கேள்வி எழுப்பினார்! கீழ்ப்படியாமை எனக் கூறி.. “பேச்சு சுதந்திரம் மறுப்பு.. சகிப்புத்தன்மை யின்மை ஹார்வர்ட் பல்கலை வளாகத்தில் நிலவுவது ஏமாற்றம் அளிக்கிறது” என அவர் தீயாக உரையாற்றியது உலகம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது.! 2024-ஆம் ஆண்டு பட்டம் பெற இருந்த 13 இளங்கலைப் பட்டதாரிகளின் அவலநிலையை அவர் எடுத்துரைத்தார்.
அவர்கள் காசா ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டதால் பட்டம் பெற அனுமதிக்கப்பட வில்லை. இதனைச் சுட்டிக்காட்டி, “மாணவர்கள் பேசினர். ஆசிரியர்கள் பேசினர்.. ஹார்வர்ட் நிர்வாகமே. பாலஸ்தீன மக்களுக்காக இவர்கள் பேசுவதை. நீங்கள் கேட்கிறீர் களா?” என ஸ்ருதி கேள்வி எழுப்பியுள்ளார். “இப்போது, காசாவில் நடந்த நிகழ்வு கள் தொடர்பாக நமது சமூகத்தில் கடுமை யான பிளவு மற்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள தருணத்தில் இருக்கிறோம். வளாகம் முழுவதும் வலி, நிச்சயமற்ற தன்மை மற்றும் அமைதியின்மையை நான் காண்கிறேன்.
இப்போது, இது போன்ற ஒரு தருணத்தில், ‘தெரியாத’ சக்தி முக்கியமானதாகிறது. இனரீதியாக குறிவைக்கப்படுவது ஏன், என்று எங்களுக்குத் தெரியாது. வன்முறை மற்றும் மரணத்தை நேருக்கு நேர் சந்திப்பது என்னவென்று நமக்குத் தெரியாது. அதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதும் இல்லை”என்ற மாணவி ஸ்ருதி, “ஒற்றுமை என்பது நமக்குத் தெரிந்ததைச் சார்ந்தது அல்ல, ஏனெனில் ‘தெரியாது’ என்பது ஒரு நெறிமுறை நிலைப்பாடு. இது பச்சா தாபம், ஒற்றுமை மற்றும் கேட்கும் விருப்ப த்திற்கான இடத்தை உருவாக்குகிறது.
எனக்குத் தெரியாது - அதனால் நான் கேட்கிறேன். நான் கேள்வி கேட்கையில்.. ஒரு முக்கியமான வகை கற்றல் நடை பெறுகிறது என்று நான் நம்புகிறேன். குறிப்பாக நிச்சயமற்ற தருணங்களில், எல்லா பதில்களும் தம்மிடம் இருப்ப தாகக் கருதாமல் உரையாடலில் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால், நமக்குத் தெரியாத மனிதர்களிடம் மனிதாபி மானத்தைப் பார்க்க முடியாது. நாம் உடன்படாத நபர்களின் வலியை உணர முடியாது?” என்று ஸ்ருதி குமார் நிறை வுரையாற்றினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹார்வர்டு மாணவி ஸ்ருதி குமார் தனது குடும்பத்தில் முதன்முதலாக அமெரிக்கா வில் உள்ள கல்லூரியில் கல்வி வாய்ப்பைப் பெற்றவர் ஆவார். ஆங்கிலம், கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழி களில் சரளமாக பேசும் அவர், ஸ்பானிஷ் மொழியிலும் புலமை பெற்றவர் ஆவார். தெற்காசியாவிலிருந்து குடியேறிய மூத்த குடிமக்கள் குடும்பத்தில் இருந்து, அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் சேரும் முதல் பெண் இவர். ஸ்ருதி குமாரின் இந்த உரைக்குப் பிறகு, காசாவில் போருக்கு எதிரான போராட்டங்களுக்காக பட்டம் பெறத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஜுன் 2 அன்று பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளது. அமெரிக்க இஸ்ரேல் மோடி கூட்டணிக்கு எதிராக அணிதிரள்வோம் என அழைப்பு விடுத்துள்ளது.
செய்தி ஆதாரம்:
தி இந்துஸ்தான் டைம்ஸ்