கடந்த சில நாட்களாக இஃபுளூயன்ஸா H3N2, H1N1 மற்றும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸால் அதிகளவில் காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் மைய்யங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அமைச்சர் H3N2 காய்ச்சல் குறித்து கவனமாக இருக்க வேண்டுமென மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது,
வேகமாக பரவி வரும் இன்ஃபுளூயன்ஸா H3N2 காய்ச்சல் குறித்து மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதன் பாதிப்புகளை ஒன்றிய அரசு கூர்ந்து கவநித்து வருகிறது.கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் மார்ச் 5 வரை 5,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.H3N2 காய்ச்சலால் இதுவரை 2 பேர் உயிரிழப்புஎன ஒன்றிய அமைச்சர் மன்சூக் மாண்டவியா எச்சரிக்கை.