புதுதில்லி,பிப்.17- நாட்டு மக்களை அச்சு றுத்தி வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இத னால், கொரோனா கட்டுப் பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூடு தல் தளர்வுகளை அறிவிக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடி தத்தில், நாடு முழுவதும் ஜன வரி 21ஆம் தேதி முதல் தொட ர்ந்து கொரோனா நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த வாரம் சராசரி பாதிப்பு 50,476 ஆக பதிவாகியுள்ளன. பிப்ர வரி 15ஆம் தேதி தினசரி விகிதம் 3.63 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், மாநிலங்களில் உள்ள நேர்மறை வழக்கு களை கருத்தில் கொண்டு கொரோனா கட்டுப்பாடு களில் கூடுதல் தளர்வுகளை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும். அதுகுறித்து ஆய்வு செய்து, மேலும் தளர்வுகளை அறிவிக்க லாம். மேலும், மக்களின் பொருளாதாரம் தடைபடா மல் இருக்க தங்கள் மாநில எல்லைகளில் உள்ள விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை களை நீக்க வேண்டும். கொரோனா உறுதியாகும் விகிதத்தை மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொரோனா சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி மற்றும் விதிமுறைகளை கடைப் பிடித்தல் ஆகிய ஐந்து அடுக்கு உத்திகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.