கிராமப்புற இந்தியாவில் உள்ள மாணவ, மாணவி கள் மருத்துவர்கள் அல்லது பொறியாளர்களாக ஆவதற்குத் தான் ஆசைப்படுகிறார்கள். அவர்களில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் என்கிறது 2023-ஆம் ஆண்டு கல்வி நிலை (தற்காலிக) அறிக்கை. (மொத்தம் 248 பக்கங்கள்) இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. 11, 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், மாணவி கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணி தம் போன்ற படிப்புகளையே தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக மாணவிகள் கலைப் பிரிவு படிப்புகளையே தேர்வு செய்கிறார்கள்.
ஒட்டுமொத்தத்தில், 18.2 சதவீத மாணவிகள், 16.7 சதவீத மாணவர்கள் தான் மருத்துவர்களாகவோ அல்லது பொறியாளர்களாகவோ ஆக விரும்பு கின்றனர். ஆண்களில், 36.3 சதவீதம் பேர் கலைப் பிரிவு படிப்புகளை தேர்ந்தெடுக்கின்றனர். பெண் களில் 28 சதவீதம் பேர் கலைப்பிரிவு படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர். 2023-ஆம் ஆண்டு செப்டம் பர் மற்றும் நவம்பரில் நாடு முழுவதும் உள்ள 28 மாவட்டங்களில் 14-18 வயதுடைய கிராமப்புற மாணவர்களிடையே ஏஎஸ்இஆர் அமைப்பு (கல்வி நிலை குறித்து ஆய்வு செய்யும் அமைப்பு) ஆய்வு நடத்தியுள்ளது.
அந்த ஆய்விலேயே மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 14-18 வயதிற்குட்பட்டவர்கள் (இருபாலரும்) 45 சதவீதம் பேர் மருத்துவர்கள் அல்லது பொறியாளர் களாக ஆக விருப்பப்படுவது தெரியவந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகமான மாணவர்களில் பொறியியல், மருத்துவப் படிப்புகளை தேர்வு செய்துள் ளனர். ஆய்வு நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் அனந்தநாக் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. நாட்டின் தென் மாநிலங்கள் எர்ணாகுளம் (கேரளம்), பெரம்பலூர் (தமிழ்நாடு), ஸ்ரீகாகுளம் (ஆந்திரா) ஆகியவற்றில் அதிகமான மாணவர்கள் மருத்துவர்கள், பொறியாளர்களாக ஆக விரும்பி யுள்ளனர். இருப்பினும், அனந்த்நாக் மாவட்ட மாணவர்கள் விருப்பம் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவு பொருத்தமற்றதாக இருந்துள் ளது.
உதாரணமாக, இந்த மாவட்டத்தில் 39.5 சதவீத மாணவர்கள், 42.8 சதவீத பெண்கள் மருத்து வர்கள் அல்லது பொறியாளர்களாக ஆக விரும்பி னர். ஆனால் மாணவர்களில் 16.5 பேர் மட்டுமே 11 அல்லது 12-ஆம் வகுப்பில் அதற்கு மேற்பட்ட வகுப்பில் பொறியியல், மருத்துவம் சார்ந்த பாடங் களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 28 மாவட்டங்களில் வேறு எந்த மாவட்டத்திலும் இப்படி ஒரு அப்பட்டமான மாறுபாடு காணப்படவில்லை. எர்ணாகுளம், பெரம்பலூர் மற்றும் ஸ்ரீகாகுளம் மாணவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பொருத்தமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், 26.7 சதவீத மாணவர்களும் 27.1 சதவீத மாணவிகளும் பொறியாளராகவோ, மருத்துவராகவோ விரும்பி யுள்ளனர். மொத்தத்தில் 50 சதவீதத்திற்கும் அதிக மானோர் இந்தத்துறை சார்ந்த படிப்புகளையே தேர்ந்தெடுத்துள்ளனர். பில்வாரா (இராஜஸ்தான்), கூச்பீஹார் (மேற்கு வங்கம்) சம்பல்பூர் (ஒடிசா) மாவட்டங்களில் மிகக்குறைவானவர்களே பொறியியலாளராகவோ, மருத்துவராகவோ விரும்புகின்றனர். 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கலை அறிவியல் பாடங்களை தேர்வு செய்ய விரும்பியுள்ளனர்.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 28 மாவட்டங்களில் கலை-மனிதநேயம் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்ததில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம். பள்ளிகளில் அறிவியல் பாடத்தை விரும்பிப் படித்த மாணவர்கள் 33 சதவீதம் பேர் என வைத்துக்கொண்டால், இவர்களில் 20 சதவீதம் பேர் அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்குப் பதில் கலை-மனித நேயம் தொடர்பான பாடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்குக் காரணம் குடும்பச்சூழல், பணப்பிரச்சனை, அறிவியல் பாடப் பிரிவுகளில் சேருவதற்கு உள்ள போட்டி ஆகியவை காரணமாக இருக்கலாம்.
அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களின் வாசிப்புத் திறனும், கணிதத்தில் உள்ள புலமையும் கலை-மனிதநேயப் பிரிவுகளை தேர்வு செய்த மாணவர்களைவிட அதிகம். இதற்குக் காரணம் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை அளிக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் மாணவரோ, மாணவியோ பொறியாளராகவோ, மருத்துவராகவோ விரும்பி னால் அவரது குடும்பச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடாது. அதாவது மேல்தட்டு மக்களாக இருக்கவேண்டும். பணத்திற்கு பஞ்சம் இருக்கக்கூடாது. அறிவியல் பாடப்பிரிவுகளில் உள்ள போட்டிகளை எதிர்கொள்பவராக அவர்கள் இருக்க வேண்டும் என்பது தான்.