india

img

வங்கதேச கலவரத்தில் அவாமி லீக் கட்சித் தலைவர்கள் 29 பேர் படுகொலை

டாக்கா, ஆக.7 - வங்கதேச கலவரத்தில் முன்னாள் பிரதமர் ஷேக்  ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர் கள் என 29 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

எதேச்சதிகார மற்றும் ஊழல் ஆட்சியாக மாறி விட்டிருந்த ஷேக்  சீனாவின் ஆட்சிக்கு எதிராக வங்கதேச மாணவர்களின் போராட்டத்தைப் பயன் படுத்தி கலவரம் உருவாக்கப் பட்டு, ஷேக் ஹசீனா ஆட்சி யை விட்டும் நாட்டை விட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசுக்கு ஆலோ சகராகவும் தலைவராகவும் நோபல் பரிசு பெற்ற முக மது யூனிஸ் பொறுப்பேற்க வேண்டும் என மாணவர் அமைப்புகள் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். 

சிகிச்சைக்காக பிரான்ஸ் சென்றுள்ள அவர் ஆகஸ்ட் 8 (இன்று) வங்க தேசம்  திரும்புவதாக அறி வித்துள்ளார். 

மேலும் அமைதியை கடைபிடிக்கவும் நாட்டை  கட்டியெழுப்பவும் வங்க தேச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே, ஷேக் ஹசீனா எந்த நாட்டிலும் தஞ்சமடைய அனுமதியை  எதிர்பார்க்கவில்லை. அவர் சிறிது காலம் இந்தியாவில் தங்கியிருப்பார் என அவரது முன்னாள்  ஆலோசகரும் மகனுமான  சஜீப் வசேத் ஜாய், ஜெர்மன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள் ளார். 

ராணுவம் சதி?

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிற கும் வன்முறை கட்டுக்குள்  வரவில்லை. முன்னதாக அந்நாட்டு ராணுவம் போராட் டத்தை கட்டுப்படுத்தவும், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தவும் மறுத்துள் ளது என்ற தகவலும் வெளி யாகியுள்ளது. ஷேக் ஹசீனா  நாட்டை விட்டு வெளியேறு வதற்கு முதல் நாள் இரவு ராணுவத் தளபதி வாக்கர் உஸ் ஜமான், பிற ராணுவ தளபதிகளை அழைத்து இது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இது அந்நாட்டு ராணு வத்தின் ஆதரவை ஹசீனா  இழந்துவிட்டார் என்பதை  காட்டுவதுடன்  ராணுவத்தின் மீது வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்ற  சந்தேகமும் உருவாகி உள்ளது. 

இதன்காரணமாக ஹசீனா நாட்டைவிட்டு வெளி யேறிய பிறகும் கிட்டத்தட்ட 300 க்கும் அதிகமான நபர்கள்  வன்முறையில்  கொல்லப்பட்டுள்ளனர்.

ஹசீனாவின் அவாமி  லீக் கட்சியின் தலைவர்கள் மீதும் குடும்ப உறுப்பினர் கள் மீதும் நாடு முழுவதும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக  நாடு முழுவதும் அக்கட்சியை சேர்ந்த 29 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

இடதுசாரிகள் பேரணி 

இந்நிலையில், வங்கதே சத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும், மீண்டும் அமைதியை நிலைநாட்ட வும், வன்முறைக்கு எதிராக வும் இடதுசாரிகள் பேரணி நடத்தியுள்ளனர். வங்க தேசத்தின் புரானா பல்டன் நகர் பகுதியில் இப்பேரணி  நடந்துள்ளது.

இடைக்கால அரசாங்கத் தை அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த  வேண்டும் என இப்பேரணி யில் கோரிக்கை விடுத்துள்ள னர். மேலும் எந்த வேறுபா டும் இன்றி நாட்டையும்,  நாட்டு மக்களையும், அவர் களது  சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்  துள்ளார். 

இந்த பேரணியில் வங்க தேச கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ரூஹின் ஹொசைன், தலைவர் ஷா ஆலம், வங்கதேச ஜசோத் அமைப்பின்  நிலைக்குழு உறுப்பினர் டாக்டர். முஸ்டாக் ஹொசைன், வங்கதேச ஜாதியா சமாஜ்தந்திரிக் தள் தலை வர் ஷெரீப் நூருல் அம்பியா, புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக் பொதுச் செயலாளர் இக்பால் கரீம் ஜாஹித், புரட்சிகர கணதந்திரிக் கட்சி யின் பொதுச் செயலாளர் மோஸ்ரஃபா மீஷு, சம்யபாடி அந்தோலோன் ஒருங்கிணைப்பாளர் சுவரன்சு சக்ரவர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.