மதுரை,ஏப்.23- காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தாளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும், பாதிக்கப்பட்டோருக்கு உயர் சிகிச்சையும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தாக்குதலில் பலியானவர்களினுடைய குடும்பங்களின் துயரத்திற்கு ஆறுதல் கூற வார்த்தையற்று தவிக்கிறது தேசம். என சு.வெங்கடேசன் எம்.பி தனது கண்டனங்களையும் இரங்களாஇயும் தெரிவித்துள்ளார்.