கேரளாவுக்கு மறுக்கப்பட்ட வெளிநாட்டு நிதியுதவி, மகாராஷ்டிரத்துக்கு மட்டும் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஓரவஞ்சனையாக செயல்பட்டு வருகிறது என்பதை பறைசாற்றுகிறது.
2018 ஆம் ஆண்டு கேரலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பேரிடருக்கு நிவாரண நிதியாக 2.85 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
அந்த பேரிடருக்கு ஐக்கிய அரபு அமீரகம் 100 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன் வந்த போது ஒன்றிய பாஜக அரசு அந்த நிதியை பெற கேரள அரசுக்கு அனுமதி மறுத்துவிட்டது
ஆனால் தற்போது ஒன்றிய பாஜக அரசு, இயற்கை பேரிடர்களின்போது பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் மகாராஷ்டிர மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் வகையில், வெளிநாட்டு பங்களிப்பு(ஒழுங்குமுறை) சட்டம், 2010- இன் கீழ் முதன்முறையாக அனுமதி வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் வெளிநாட்டு நிதியை அனுமதி மறுத்த ஒன்றிய பாஜக அரசு. தற்போது மகாராஷ்டிராவுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஓரவஞ்சனையாக செயல்படுகிறது என்பதற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டாகும்.