health-and-wellness

img

மாரடைப்பு

மனித உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் இருதயமும் ஒன்றாகும். இந்த இருதயமும், இதயமும் ஒன்றா? என்ற கேள்வி இப்பொழுது எழக்கூடும். இதயம் (மனம்) இல்லாதவர்கள் போல் நம்முள் பலர் உண்டு. அவர்களைப் பற்றி இப்பொழுது கவலையில்லை. ஆனால் இருதயம் இல்லாதவர்கள் உயிர் வாழ முடியாது என்பது நாம் அறிந்த உண்மை. ஆகவே எல்லோரும் இருதயத்தில் வரும் நோய்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம். அந்த இருதயத்தில் வரும் நோய்கள்தான் எத்தனை வகைகள்.

இருதயத்தில் வரும் நோய்களின் வகைகள்

1. குழந்தை கருவில் இருக்கும் பொழுதே பிறவிக் கோளாறாக  ஆரம்பிக்கும் இருதய நோய்.
2. குழந்தை பிறந்த சில ஆண்டுகள் கழித்து மூட்டுவாத சுரம் வந்த பின் சில ஆண்டுகள் கழித்து வரும் இருதய நோய்.
3. சில சமயங்களில் இருதயத் தசை பழுதடைவதால் உண்டாகும் “கார்டியோமையோபதி” என்ற நோய், (இன்னும் அறிவியல் உலகு இதன் உண்மைக் கரணத்தைக் கண்டுப்பிடிக்க        முடியவில்லை.
4. இவைகளை எல்லாம் விடக் கொடுமை வாய்ந்த மாரடைப்பு நோய். (இந்நோய் இருதய பலவீனமுள்ள மனிதர்களில் 80 சதவிகிதத்தினரைத் தாக்க வல்லது)

மாரடைப்பு நோய் இருதயத்தை எப்படி தாக்குகிறது?

மையோகார்டியோ இன்பார்க்சென் என்ற மருத்துவர்களால் அழைக்கப்படும் இந்த மாரடைப்பு நோய், இருதயத்தில் தசைகளுக்கு இரத்தம் அளித்துக் காப்பாற்றும், ‘கொரனரி’ என்றும் தமனிகள் தடைப்பட்டு இருதயத் தசைகள் இரத்தம் பெற முடியாமல் இருதயம் செயலற்றுப் போய் விடுவதால் ஏற்படுகின்றது. இதனைத்தான் மக்கள் ‘மாரடைப்பு’ என்று கூறுகிறார்கள்.

... தொடரும்...