விவசாய சகோதர, சகோதரிகளின் அயராத உழைப்பைக் கண்டு இந்த நாடு பெருமை கொள்கிறது. விவசாயிகள் பலமாக இருந்தால் அதைவிட பலமடங்கு வளமானதாக புதிய இந்தியா மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருக்கிறார். மேலும் பி.எம்.கிசான் சம்மான் நிதி மற்றும் பல வேளாண் திட்டங்களால் விவசாயிகள் பலனடைந்து வரு வதை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கி றது என்றும் அகமகிழ்ந்திருக்கிறார்.
இந்திய விவசாயிகள் தங்களின் ஒரு வரு டத்திற்கு மேலான போராட்டத்தால் அவர்க ளுக்கு விரோதமான ஒன்றிய அரசின் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வைத்தனர். ஐந்து மாநில தேர்தலை மனதில் கொண்டு பிரதமர் மோடியும் சற்று பின்வாங்கி சட்டங்களை திரும்பப் பெறுவதாய் அறிவித்து விவசாயிக ளிடம் மன்னிப்பும் கேட்டார்.
இப்போது தேர்தல் முடிந்துவிட்டது. அதனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவது போல் பழைய வேளாண் விரோத சட்டங்கள் மூன்றையும் கொண்டு வருவதற்கு சில பூர்வாங்க வேலைகளை துவக்கியிருக்கிறது ஒன்றிய அரசு. அண்மையில் உச்சநீதிமன்றம் நியமித்த குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவரைக் கொண்டு வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிடச் செய்திருந்தது.
இப்போது நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் என்பவர் வேளாண் துறை வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியமானது. ஆனால் விவ சாயிகளின் ஒரு பிரிவினர் மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தினர் என்றும் தொடர் போராட்டம் காரணமாக மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது என்றும் கூறி யிருக்கிறார். இவர்களது சீர்திருத்தம் என்பது கார்ப்பரேட் கனவான்களை கொழுக்க வைப்பதே என்பதும் இந்திய விவசாயிகளை நோகடிப்ப தும், சாகடிப்பதுமே என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
அத்துடன் ரமேஷ் சந்த் வேளாண் சட்டங்க ளை அமல்படுத்தாமல் விவசாயிகளின் வருமா னத்தை இரட்டிப்பாக்குவது சாத்தியமில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த பின்னணி யில்தான் பிரதமர் மோடியும், விவசாயிகளை புகழ்ந்து அவர்களை நசுக்க வலை விரிக்கத் துவங்கியிருக்கிறார். ஏற்கெனவே சட்டங்களை திரும்பப் பெற்ற போது, ஒரு பிரிவு விவசாயி களுக்கு புரிய வைக்க முடியவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதைப் பற்றி ஏதும் வாயை திறக்காமல் தனது திட்டங்களால் விவசாயிகள் பலமடைந்து வரு வதாக மோடி கூறியிருப்பது நகைக்கத்தக்கது.
மேலும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத மோடி அரசின் மோசடித்தனமான நடவடிக்கை தொடரவே செய்கிறது. இந்த நிலையில் விவசாயிகள் பல மடைவதாக கூறுவது எள்ளி நகையாடுவதாகும்.