games

img

20 வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.... சென்னையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்....

சென்னை:
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்-லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரைகுறை ஆடையுடன் ஆன்-லைன் வகுப்புகளை நடத்திய ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், சென்னையில் உள்ள பாரிமுனை பகுதியில் உள்ள தடகளப்பயிற்சி மையத் தின் பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார் எழுந்துள் ளது. 20க்கும் மேற்பட்ட தடகள வீராங்கனைகள் நாகராஜனின் மீது பாலியல் புகார் அளித்தனர்.இந்த தகவலும் இணையத்தில் வெளியாகி காவல் துறையினரின் கவனத்திற்கு சென்ற நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விளக்கமளிக்க பூக்கடை காவல் ஆணையர் நாகராஜனுக்கு சம்பன் வழங்கியுள்ளார்.பூக்கடை காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்து நாகராஜன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தடகள பயிற்சியாளராக இருந்து வந்த நாகராஜன் சுங்கத் துறையில் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படம் : மாதிரிக்கு மட்டுமே...  சம்பவத்திற்கு அல்ல...  

;