நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் இது வரை 9 அணிகளுக்கான கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு அணிக்கு மட்டும் கேப்டன் அறிவிக்கப்பட வில்லை. அந்த அணியின் கேப்டனாக இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி தானாக கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். தென் ஆப்பிரிக்கா வீரர் டு பிளசிஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் கேப்டன்களில் ஹைதராபாத் அணியின் கேப்டன் (வில்லியம்சன் - நியூசிலாந்து) மட்டுமே வெளிநாட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற அனைவரும் இந்திய வீரர்கள் தான் கேப்டனாக உள்ளார்கள்.
சென்னை - எம்.எஸ்.தோனி
கொல்கத்தா - ஷ்ரேயாஸ்
மும்பை - ரோஹித் சர்மா
தில்லி - ரிஷப் பண்ட்
ராஜஸ்தான் - சஞ்சு சாம்சன்
ஹைதராபாத் - வில்லியம்சன் (நியூசிலாந்து)
பஞ்சாப் - மயாங்க் அகர்வால்
லக்னோ - கே.எல். ராகுல்
குஜராத் - ஹார்திக் பாண்டியா