games

img

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலத் தொடக்கம்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாரா ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி , ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடந்தது . 

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ஆம்  தேதி வரை நடக்கிறது. இதில் 163 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4500 மாற்றுத் திறனாளி வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார்கள். 

டோக்கியோவில் அரங்கேறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர் வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிக வீரர்களைக் கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். 

இந்நிலையில் , டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்தியத் தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி தேக் சந்த் தேசியக் கொடியை ஏந்தி சென்றார்.  

;