சர்வதேச டென்னிஸ் உல கின் முக்கிய தொடர்களில் ஒன்றான இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்கா வின் கலிபோர்னியா நகரில் நடை பெற்று வருகிறது.
இந்த தொடர் தற்போது நடுகட்ட த்தை தாண்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்று ஆட்டத்தில் உலகத்தர வரிசையில் முதலிடத்தில் இருப்பவ ரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அனுபவ வீரரான செர்பியா வின் நோவக் ஜோகோவிச், தர வரிசையில் இல்லாத புதுமுக வீர ரான இத்தாலியின் லூக்கா நார்டி யிடம் 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்த நிலையில், நார்டி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
20 வயது வீரர்
லூக்கா நார்டி (20 வயது) டென்னிஸ் உலகில் காலடி வைத்து இரண்டு வருடங்கள் கூட ஆக வில்லை. எந்தவொரு கிராண்ட்ஸ் லாம் தொடரிலும் தகுதி சுற்றை தாண்டியது கூட கிடையாது. போது மான அளவில் அனுபவம் இல்லாத சூழலில் திடீரென இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடரின் 3-ஆவது சுற்றில் ஜோகோவிச்சை, நார்டி புரட்டியெடுத்துள்ளார். ஜோகோவிச் இளம் வீரரிடம் படு தோல்வியை சந்தித்து இருப்பது டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜோகோவிச் மட்டுமே அதிர்ச்சி தோல்வியடைந்துள்ள நிலை யில், மெத்வதேவ் (ரஷ்யா), ரூத் (நார்வே), டிமிட்ரோவ் (பல்கெ ரியா), பிரிட்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
4-ஆவது சுற்றில் சபலென்கா
மகளிர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்று ஆட்டத்தில் உலகத்தரவரிசை யில் 2-ஆவது இடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, தரவரிசையில் இல்லாத பிரிட்டனின் ரடுகானுவை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
சபலென்காவைப் போலவே முன்னணி வீராங்கனைகளான சக்கரி (கிரீஸ்), கசட்கினா (ரஷ்யா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்), நவர்ரோ (அமெரிக்கா) ஆகியோர் 4-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றனர். அதிகம் எதிர்பார்த்த சுவிடோலினா (உக்ரைன்), ஒசாகா (ஜப்பான்) ஆகியோர் 3-ஆவது சுற்றில் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினர்.
மும்பை
முழு உடல் தகுதியில் ரிஷப் பண்ட்
ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ அனுமதி
உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 17-ஆவது சீசன் வரும் மார்ச் 22 அன்று தமிழ்நாடு தலைநகர் சென்னையில் தொடங்கும் நிலையில், இந்த தொடருக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், ஐபிஎல் தொடரில் தில்லி அணியின் கேப்டனாக உள்ள ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியை பெற்றுள்ளார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாயன்று அறிவித்த நிலையில், அவர் தில்லி அணிக்கெதிராக நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது உறுதியாகிவிட்டது.
ஆனால் காயத்தால் அவதிப்படும் பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் 14 மாத மறுவாழ்வு சிகிச்சைக்குப் பிறகு கிரிக்கெட் களத்தில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல்: இன்னும் 9 நாட்கள்
டபிள்யு.பி.எல் 2024
தில்லி - குஜராத்
(20-ஆவது லீக் ஆட்டம்)
நேரம் : மாலை 7:30 மணி
இடம் : தில்லி மைதானம்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஒடிடி)