கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா - போபண்ணா ஜோடி தனது அரையிறுதி ஆட்டத்தில், நீல் (பிரிட்டன்) - டெசைரா (அமெரிக்கா) ஜோடியை 7-6 (7-5), 6-7 (5-7), 10-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.
கோப்பையுடன் விடைபெறுவாரா சானியா?
இந்தியாவின் நட்சத்திர வீராங் கனையும், டென்னிஸ் உல கின் அதிரடி நாயகியுமான சானியா மிர்சா (36), வயது மற்றும் குடும்ப பொறுப்பு காரணமாக அடுத்த மாதம் நடைபெறும் துபாய் டென்னிஸ் தொடரோடு சர்வதேச டென்னிஸ் உலகில் இருந்து விடைபெறுகிறார். இதனால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்தான் சானியா மிர்சா வின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆகும். மகளிர் இரட்டையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை யான டேனிலினாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சானியா 2-வது சுற்றில் வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா, போபண்ணாவுடன் ஜோடி சேர்ந்து அபாரமான ஆட்டத்து டன் இறுதிக்கு முன்னேறியுள்ள நிலை யில், கோப்பையுடன் விடைபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
7-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா?
சானியா மிர்சா இரட்டை யர் பிரிவில் 3 (ஆஸ்திரேலி யா -2016, விம்பிள்டன் -2015, அமெரிக்கா - 2015) பட்டங்களும், கலப்பு இரட்டையர் பிரிவில் 3 (ஆஸ்திரேலியா - 2009, பிரெஞ்சு - 2012, அமெரிக்கா - 2014) என மொத்தம் 6 பட்டங்கள் வென்றுள்ளார்.
போபண்ணா 2வது முறையாக பட்டம் வெல்வாரா?
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா பட்டம் வென்றால் இது அவருக்கு இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஏற்கெனவே 2017-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் கேப்ரியலா என்ற கனடா வீராங்கனையுடன் ஜோடி சேர்ந்து கிராண்ட்ஸ்லாம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் ஜோகோவிச்
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலி றுதி ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்ப வருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவை ரப்லவை 6-1, 6-2, 6-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் டாமி பால், சக நாட்டு வீரரான பென் ஷெல்டானை 7-6 (8-6), 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இருவருமே போட்டித் தரவரிசையில் இல்லாமல் களமிறங்கி யவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிளிஸ்கோவா அபாரம் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் பிளிஸ்கோவா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் போலந்தின் லினிட்டேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி னார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் சபலென்கா குரோஷியா வின் வெக்கிச்சை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.