நாட்டில் 1970களின் முற்பகுதியில் காதில்கர் சகோதரிகள் அரங்குக்கு வரும் வரை இந்தியப் பெண்களுக்கான சதுரங்கம் கிட்டத்தட்ட இல்லை. அதற்கு முன், 1933 இல், பாத்திமா குலாம் என்ற இந்தியப் பெண், பிரிட்டிஷ் பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றிருந்தார். 1974 ஆம் ஆண்டு வசந்தி காதில்கர் முதன் முதலாக தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அவரைத் தொடர்ந்து அவரது சகோதரிகளான ஜெயஸ்ரீ, ரோகினி காதில்கர் சதுரங்க விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இவர்கள் இருவரும் மும்பையைச் சார்ந்தவர்கள்.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்தில் 25க்கும் குறைவான வீராங்க னைகளே சதுரங்க விளையாட்டில் அசத்தி யிருக்கிறார்கள். சதுரங்கம் விளையாடும் கலாச்சாரத்தில் காதில்கர் சகோதரிகள் தொடங்கி விஜயலட்சுமி, சரிதா ரெட்டி, ஆர்த்தி ராமசாமி, பக்தி குல்கர்னி, அனு பமா, சௌமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி என வரிசை நீள்கிறது. இந்த வரிசையில் தற்போது வைஷாலி இடம்பிடித்து உள்ளார். வைஷாலி இந்தப் பெயர் நாடு முழுக்க அதிகம் பேசப்படுகிறது. இளம் வயது சர்வ தேச கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்ப தற்காக அல்ல. தமிழ்நாட்டின் முதல் பெண் ணாக சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை படைத்தி ருப்பதற்காக அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்தியாவின் சதுரங்க தலைநகர மான சென்னையைச் சேர்ந்த வைஷாலி குடும்பத்திற்கு சதுரங்க வேட்டை ரத்தத் திலே ஓடிக் கொண்டிருக்கிறது. பிரக் ஞானந்தா, தனது சகோதரியுடன் விளை யாட்டாக செஸ் ஆடத் தொடங்கினார். அதுவே தொழில்முறை விளையாட்டாக மாற்றிவிட்டது. உலகக் கோப்பையில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, மிக இளம் வயதில் பங்கேற்று சாதனை படைத்தார். உலகச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்த சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். இத்தனைக்கும் மேலாக சதுரங்க வர லாற்றில் ஒரே குடும்பத்தில் அக்கா-தம்பி இருவரும் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதித்துக் காட்டியுள்ளனர். ஆறு வயதில் சதுரங்க காய்களை நகர்த்த துவங்கி 12 வயதில் உலகில் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடி ஒரு முறை தோற்க டித்து சாதனை படைத்தார் வைஷாலி. ஆனாலும் அவரது சகோதரர் பிரக்ஞா னந்தா, அக்காவைக் காட்டிலும் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறினார். தம்பியின் வேகத்தில் இல்லை என்றா லும், சாதுரியமாக காய்களை நகர்த்தி 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் உலக இளைஞர்கள் செஸ் சாம்பியன்ஷிப் பட் டத்தை வென்ற அவர், 14 வயது இருக்கும் போது மும்பையில் நடந்த தேசிய பெண்கள் சேலஞ்சர்ஸ் போட்டியில் வெற்றி பெற்றார். இளையோர்களுக்கான பல்வேறு போட்டிகளில் வைஷாலி வெற்றி பெற்றிருந்தாலும் இந்த வெற்றி தான் அவருக்கு மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்தது.
அதன் தொடர்ச்சியாக, பெண்கள் சர்வ தேச மாஸ்டர் பட்டத்தை தனது 15 வய தில் பெற்ற பெருமையை பெற்றார் வைஷாலி. 18 வயதுக்கு உட்பட்டோருக் கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்தார். மேலும், ஆசிய இளைஞர்கள் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் 2019 ஆம் ஆண்டில் தங்கப்பதக்கம் வென்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆசிய தனிநபர் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வைஷாலி, 2018 ஆம் ஆண்டில் இந்தி யாவின் பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டத் தையும் வென்று சாதனை நிகழ்த்தினார். செஸ் உலகின் ஜாம்பவான் விஸ்வ நாதன் ஆனந்த் உள்ளிட்ட பலரது பாராட்டி யும் பெற்றார். வைஷாலியின் தந்தை ரமேஷ்பாபு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்தார். அவரது ஊதியம் குடும்பத்தையும் பிள்ளைகளின் படிப்பு மற்றும் விளையாட்டுக்கு போதுமானதாக இல்லை. ஆரம்ப கட்டத்தில் சிரமப்பட்ட தால் சதுரங்கத்தின் அடிப்படை நுணுக் கங்களை கற்றுக்கொள்ள புத்தகங்கள் தான் உதவி செய்தன. அதே நேரத்தில் தம்பியின் முன்னேற் றம், மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது. கணினி வாங்குவ தற்கும் நவீன தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள பல வகையிலும் வைஷாலிக்கு உதவியாக அமைந்தது. உலக அளவில் 83 பெண்கள் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ள னர். இதில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி ஆகிய இருவர் மட்டுமே அந்த சாதனையைப் படைத்தனர். அந்தப் பட்டியலில் 3 ஆவ தாக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று வென்று சாதனை படைத்திருக்கிறார் வைஷாலி. இவர்தான் தமிழகத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் என்பது நமக்கெல்லாம் பெரு மையாகும்.