தென் ஆப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், 2-வது ஒருநாள் போட்டி வெள்ளியன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும், 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறி யாக இருப்பதால் இந்த போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடம் : போலந்து பார்க், பார்ல் நேரம் : இந்திய நேரப்படி மதியம் 2 மணி