ஒருநாள் வெயில்... 2 நாள் மழை...
மிரட்டும் இங்கிலாந்து காலநிலை மாற்றம்
ஆஷஸ்... விம்பிள்டன் தொடருக்கு சிக்கல்
உலகில் காலநிலை மாற்றத் தால் அதிகம் பாதிக்கப் பட்ட பகுதியாக இங்கிலாந்து நாடு உள்ளது. காரணம் எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது வெயில் அடிக்கும் என்பதை சாதாரணமாக வாய்தவறி கூற முடியாத அளவிற்கு காலநிலை மாறியுள்ளது. இதுபோக மழை பெய்தால் லண்டன் நகரமே நீச்சல் அடிக்கும் அளவிற்கும், வெயில் அடித்தால் தண்டவாளமே உருகி (கடந்த காலத்தில் சிக்னல் உருகியது) நகரும் அளவிற்கும் வெயில் கொளுத்தி வருகிறது. இத னால் சமீப காலமாக இங்கிலாந்து மக்கள் கொரோனா காலகட்டத்தில் எவ்வாறு கொரோனா செய்திகளை படித்தனரோ, அதே போல வானிலை செய்திகளை தினமும் படித்து வழக்க மான வேலையை தொடங்கி வருகின்ற னர். வானிலைக்கும் இங்கிலாந்திற்கும் இப்படி சொந்த பந்தம் உருவாகியுள்ள நிலையில், வானிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாக இங்கி லாந்து மண்ணில் முக்கிய விளை யாட்டுத் தொடர்கள் நடத்துவதில் ஆர்வமில்லாமல் போய்விட்டது. 2019 கிரிக்கெட் உலகக்கோப்பை முதல் பல்வேறு விளையாட்டுத் தொடர்களில் வீரர்- வீராங்கனை களுக்கு பதில் மழையே விளையாடிய வரலாறு உள்ள நிலையில், நடப்பா ண்டிலும் இந்த வரலாறு நிகழப்போ கிறது என வானிலை அறிக்கை உள்ளது. அதாவது டென்னிஸ் உலகில் அதிக பரிசுத்தொகை கொண்ட விம்பிள்டன் தொடரும், கிரிக்கெட் உலகின் முக்கிய தொடரான ஆஷஸ் தொடரும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருநாள் வெயில்... 2 நாள் மழை... என்ற அடிப்படையில் வானிலை கணிப்புகள் இருப்பதால் விம்பிள்டன், ஆஷஸ் தொடரின் சுவாரஸ்யம் மழையின் கையில்தான் உள்ளது.
இங்கிலாந்துக்கு படையெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
ஐசிசி சர்வதேச தொடர்களுக்கு அடுத்து மிகப் பெரிய கிரிக்கெட் தொடராக இருப்பது “ஆஷஸ்” எனப்படும் சாம்பல் (ஸ்டெம்ப் எரித்த விவகாரம்) யுத்தம் ஆகும். கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் எப்படி எலியும் - பூனையு மாக உள்ளார்களோ, அதே போல ஆஷஸ் தொட ரில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணி பகை யுணர்வுடன் விளையாடி வருவதால் ஆஷஸ் தொடர் கிரிக்கெட் உலகில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், ஆஷஸ் தொடரின் 73-வது சீசன் இங்கிலாந்து நாட்டில் ஜூன் 16 அன்று தொடங்குகிறது. இந்த தொடரை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு படையெடுத்து வருகின்றனர். மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட ஆஷஸ் தொடருக்கு பட்டமாக வெறும் “4 இன்ச்” கோப்பைதான் வழங்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த உள்ளங்கையில் மடித்து கொண்டு செல்லப்படும் “4 இன்ச்” கோப்பைக்கு ஆஸ்திரேலியா - இங்கிலாந்து வீரர்கள் முரட்டுத்தனமாக மோதிக்கொள்வார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கும்.
டிஎன்பிஎல் 2023
(இன்றைய ஆட்டங்கள்)
மதுரை - திருநெல்வேலி
நேரம் : மதியம் 3:15 மணி
திண்டுக்கல் - திருச்சி
நேரம் : இரவு 7:15 அணி
இரண்டு ஆட்டங்களும் இடம் : எஸ்என்ஆர் மைதானம், கோவை
சேனல் : தொலைக்காட்சி : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஒடிடி - வூட் (VOOT)
டிக்கெட் எவ்வளவு?
டிஎன்பிஎல் தொடரை நேரில் காண ஒரு நபருக்கு ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆன்லைன், நேரடியாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டாலும் கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது.