games

img

லயன் அபார பந்துவீச்சு - இந்திய அணியும் திணறல்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது பார்டர் - கவாஸ் கர் டிராபி என்ற பெயரில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட் டத்தில் (நாக்பூர்) இந்திய அணி இன் னிங்ஸ் வெற்றியை ருசித்த நிலையில், 2-வது ஆட்டம் தில்லியில் வெள்ளியன்று தொடங்கியது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஷமி (4 விக்.,) வேகப்பந்துவீச்சை சமா ளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் லயனின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கடுமை யாக திணறியது. மிடில் ஆர்டரில் விராட் கோலி (44) மட்டுமே சிறப்பாக விளை யாடினார்.  மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்ட மிழக்க இந்திய அணி 100 ரன்களில் சுருளும் அபாயம் ஏற்பட்டது. பின் வரிசை வீரர்களில் ஜடேஜா (26) ஓரளவு தாக்குப் பிடிக்க, பின்னர் அஸ்வின் (37) - அக்சர் படேலுடன் (74) ஜோடி தில்லி மைதா னத்தில் நங்கூரம் அமைத்தது. இரு வரும் நிதான வேகத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை புரட்டியெடுத்து, 8-வது விக் கெட்டிற்கு 114 ரன்கள் எடுத்து கைகொடுக்க இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக லயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 1 ரன்கள் முன்னிலை யுடன் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடியது.