குறுகிய காலத்தில் பிரபலமான புரோ கபடி லீக் தொடரின் 10-ஆவது சீசன் சனியன்று தொடங்கிய நிலையில், தொடக்க ஆட்டங்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இன்றைய ஆட்டங்கள்
புனே - ஜெய்ப்பூர் (5-ஆவது லீக்) நேரம் : இரவு 8 மணி
இரண்டு ஆட்டங்களும் டிரான்ஸ்ஸ்டேடியா மைதானம், அகமதாபாத், குஜராத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)
பெங்களூரு - பெங்கால்
(6-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
கபடியும் அகமதாபாத்தில்தான் தொடக்கம்
மோடி பிரதமர் பதவியில் அமர்ந்த நாள் முதலே தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். வெளிநாட்டு தலை வர்கள் இந்தியா வந்தால் குஜராத்திற்கு அழைத்துச் சென்று ஷூட்டிங் நடத்துகிறார். ஒன்றிய அரசு விளை யாட்டு உள்ளிட்ட நிதி ஒதுக்கீட்டில் குஜராத் மாநிலத் திற்குதான் அதிக நிதியை ஒதுக்குகிறது. இதுபோக இந்திய விளையாட்டு உலகில் முக்கியமான போட்டி களின் துவக்க விழா மற்றும் இறுதி ஆட்டங்களும் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரான அகமதாபாத்தில் தான் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் மற்றும் சமீபத்தில் நிறைவு பெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் துவக்க மற்றும் இறுதி ஆட்டங்கள் அகமதா பாத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் புரோ கபடி தொடரின் துவக்க ஆட்டமும் அகமதா பாத்தில் தான் தொடங்கியுள்ளது. அனைத்து போட்டிகளை யும் அகமதாபாத்தில் நடத்தி என்ன பயன்? விளையாட்டு நிகழ்வுகளுக்கு எப்படி வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படை கூட குஜராத்தியர்களுக்கு இல்லை என்பது உலகக்கோப்பையின் கிரிக்கெட் தொடக்க விழா மூலம் விளையாட்டு உலகம் புரிந்து கொண்டது தெரிந்த விஷயம்தானே.
மகளிர் ஜூனியர் ஹாக்கி
காலிறுதிக்கு 4 அணிகள் முன்னேற்றம்
10-ஆவது சீசன் மகளிர் ஜூனியர் ஹாக்கி தொடர் சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நெதர்லாந்து, ஜெர் மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் ஆகிய 4 அணிகள் காலிறுதிக்கு முன் னேறியுள்ளன. போட்டியை நடத்தும் சிலி மற்றும் நட்சத்திர அணிகளுள் ஒன்றான இந்தியா லீக் ஆட்டங்களில் ஏற்பட்ட சொதப்பலால் காலிறுதி வாய்ப்பை இழந்தது. இன்னும் லீக் சுற்றுகள் முழுமையாக நிறைவு பெறாத நிலையில், காலிறுதிக்கு முன்னேறும் மற்ற 4 அணிகளின் விபரம் திங்களன்று அதிகாலைக்குள் தெரியவரும். காலிறுதி ஆட் டங்கள் டிசம்பர் 6 அன்று தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றுமையின் பலம் கபடிக்கு தேவையில்லை
ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு சுவா ரஸ்யமான அதிசய சம்பவங்கள் இருக் கும். அதன்படி கபடி விளையாட்டில் தடுப்பாட் டத்தில் சுவாரஸ்யமான நிகழ்வு அடிக்கடி அரங் கேறும். அதுயாதெனில் தடுப்பாட்டத்தில் 7 பேர் செய்ய முடியாத காரியத்தை 2 பேர் அசத்தலாக செய்து முடிப்பார்கள். அதாவது தடுப்பாட்டத்தில் ஈடுபடும் அணியில் 7 வீரர்கள் இருந்தும் “ரைடரை” பிடிக்கமுடியாமல் திணறுவார்கள். ஆனால் 5 வீரர்கள் பெஞ்சில் இருக்கும் பொழுது 2 பேர் மட்டும் தடுப்பாட்டம் ஈடுபடும் பொழுது “ரைடரை” எளிதாக பிடிப்பார்கள். இதனால்தான் கபடிக்கு ஒற்றுமையின் பலம் தேவையில்லை எனக் கூறுவார்கள்.