games

img

விளையாட்டு...

சுவாரஸ்யத்தை இழக்கும் தில்லி உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

நடப்பாண்டிற்கான மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரை  இந்தியா நடத்துகிறது. மார்ச் 15 முதல் 26-ஆம் தேதி வரை தில்லி ஜாதவ் மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரில் 74 நாடுகளைச்  சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீராங்கனை கள் பங்கேற்பார்கள் எனவும், தில்லி தொடர்தான் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டியாக இருக்கும் என்று உலக  குத்துச்சண்டை அமைப்பு கூறியது. இதனால் தில்லி உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலை யில், எதிர்பார்ப்புக்கு ஒரு சிக்கல் முளைத் துள்ளது. இந்த தொடரில் உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் ரஷ்ய மற்றும்  பெலாரஸ் (ரஷ்ய ஆதரவு) வீராங்கனைகள் சேர்க்கப்பட்டதால் அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, போலந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, செக் குடியரசு, சுவீடன் மற்றும்  கனடா ஆகிய நாடுகள் விலகுவதாக அறி வித்த நிலையில், உக்ரைனும் தில்லி  உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் விலகுவதாக அறிவித்துள்ளது. மேலும் பல நாடுகள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரை புறக் கணிக்கும் நோக்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தில்லி  உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் சுவா ரஸ்யத்தை இழக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.

ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட் சர்ச்சை புதிதல்ல

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது சீசன் மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் வெறும் 5 ரன்கள் வித்தி யாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.  173 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 14 ஓவர்களுக்கு 4 விக்கெட் 133 ரன்கள் என நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த பொழுது கேப்டன் ஹர்மன்ப்ரீத் (52) ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்பு ஜெமிமாவும் (43) வெளியேற இந்திய மகளிர் அணி சீட்டுக்கட்டாய் சரிந்து 20 ஓவர்களில் 8 விக்., 167 ரன்கள் மட்டுமே இழந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை எதிர்கொண்டது. 

ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட் காரணம்

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்தான். அவர் ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்திய அணி 2 ஓவர் மீதம் வைத்து இறுதிக்கு முன்னேறியிருக்கும். முக்கியமாக இந்திய அணியின் தோல்வி யை விட ஹர்மன்ப்ரீத் ரன் அவுட் விவகாரம் பல்வேறு சர்ச்சையை  எதிர்கொண்டு வருகிறது. 2-வது ரன்னுக்கு ஓடி வரும்போது பேட் மைதான பிட்ச் பகுதியில் சிக்கியதால் கிரீஸைத் தொட முடியா மல் தடுமாறினார். அதற்குள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஸ்டெம்பிங் செய்தார். பேட் சிக்காமல் இருந்திருந்தால் ஹர்மன்ப்ரீத் முன்கூட்டியே கிரீஸை தொட்டிருப்பார். எதிர்பாராத ரன் அவுட் தற்போது இந்திய அணியின் தோல்விக்கு காரண பொருளாக மாறிவிட்டது.

மைதான வரலாறு நாசர் ஹுசைனுக்கு தெரியாதா?

கிரிக்கெட் விளையாட்டின் மைதானத்தில் பிட்ச் பகுதி மட்டுமே சீராக, சரிசமமாக இருக்கும். ஆனால் புல்தரை பகுதிகளில் ஓடுவதற்கு ஏற்ப 80 சதவீதம் மட்டுமே சரிசமமாக இருக்கும். காலணி (ஷூ) தடங்களால் புற்கள் மண்ணுக்குள் சென்று சில இடங்களில் லேசாக பள்ளம் கூட இருக்கும். இப்படிப்பட்ட புல் பள்ளங்களில் பேட் சிக்கியதால்தான் கிரீஸைத் தொட முடியாமல்  தடுமாறி ரன் அவுட் ஆனார் ஹர்மன்ப்ரீத். கிரிக்கெட் பிட்ச் நிலை பற்றி எல்லாம் தெரிந்தும் இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர்  ஹுசைன் ஹர்மன்ப்ரீத் ரன் அவுட் விவகாரத்தை “சிறுபிள்ளைத்தனமானது” என கிண்டல் செய்துள்ளது சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. 

மாற்றம்: மீண்டும் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் (பார்டர்-கவாஸ்கர் கோப்பை) விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1-ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் சொந்த விவகாரம் காரணமாக தாய்நாடு திரும்பியுள்ளதால் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார். இதனால் கேப்டன் பொறுப்பை மூத்த வீரரும், முன்னாள் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித் ஏற்கவுள்ளார். ஸ்மித் 3-வது டெஸ்ட் போட்டிக்கு மட்டுமா? இல்லை டெஸ்ட் தொடர் முழுமைக்கும் கேப்டனாக செயல்படுவாரா? என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெளிவாக விளக்கவில்லை.