மெல்போர்னை மிரட்டிய மழை : 2 ஆட்டங்களும் ரத்து
காலநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலிய கண்டம் வித்தியாசமான வானிலையை எதிர்கொண்டு வருகிறது. அதாவது எப்பொழுது மழை, எப்பொழுது வெயில் அடிக்கிறது என கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதில் குளிர் வேறு அதிகமாக வாட்டி வருகிறது. இந்த மாறுபட்ட வானிலையால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி-20 தொடர் பல்வேறு சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில், வெள்ளியன்று “சூப்பர் 12” சுற்றின் இரண்டு ஆட்டங்களும் (ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து) டாஸ் கூட போட முடியாமல் ரத்து செய்யப்பட்டன. இதனால் 4 அணி களுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. மழையால் ஆட்டம் ரத்து செய்யப்படுவது புள்ளிபட்டியலில் குழப்பமான சூழலை ஏற்படுத்தும்.
கிரிக்கெட் விளையாட்டிற்காக டுவிட்டரில் மோதிக்கொண்ட பாகிஸ்தான் - ஜிம்பாப்வே தலைவர்கள்
“சூப்பர் 12” சுற்றின் 12-வது ஆட்டத்தில் கோப்பை யை வெல்லும் அணியின் பட்டிய லில் இருக்கும் பாகிஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் புரட்டி யெடுத்து திரில் வெற்றியை ருசித்தது கத்துக்குட்டி ஜிம்பாப்வே அணி. உலகின் அதிபயங்கர கிரிக்கெட் மை தானத்தில் (பெர்த்) பலமான, அதுவும் மிரட்டல் வேகப்பந்துவீச்சாளர்கள், சூப்பர் ஆர்டர் பேட்டர்களை கொண்ட பாகிஸ்தான் அணியை எளிதாக சமாளித்து வெறும் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தி இருப்பது கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சி அலை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் உலகமின்றி உலகின் பல்வேறு தரப்பினரும் ஜிம்பாப்வே அணியை பாராட்டி வருகின்றனர். இந்த பாராட்டுக்கு இடையே பாகிஸ்தான், ஜிம்பாப்வே இரு நாட்டு தலைவர்கள் மூலம் சர்ச்சை என்னும் பெயரில் ஒரு ஆறு கரை புரண்டு ஓடுகிறது. சர்ச்சைக்கு காரணம் ஜிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா. எம்மர்சன் டுவிட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பதிலடி கொடுக்க கிரிக்கெட் விளையாட்டு, அரசியலிலும் அதிரடி மோதலை உருவாக்கியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டு அரசியல் முகமாக மாறியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இருநாடுகளைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் கடுமையாக கருத்து மோதல் மற்றும் கிண்டல் மீம்ஸ்களால் மோதி வருகின்றனர்.
ஜிம்பாப்வே ஜனாதிபதியின் டுவிட்
“ஜிம்பாப்வேக்கு என்ன வொரு வெற்றி..! வீரர்களுக்கு வாழ்த்துகள்..! அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்..” என பாகிஸ்தான் அணியை கிண்டலுடன் சாடியுள்ளார் ஜிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா.
பாகிஸ்தான் பிரதமரின் டுவிட்
“எங்களிடம் உண்மையான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களிடம் உண்மையான கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறது. திரும்பி மீண்டு வரும் கேளிகையான பழக்கம் பாகிஸ் தானியர்களிடம் உண்டு. வாழ்த்துக்கள், இன்று உங்கள் அணி நன்றாக விளையாடியது” என டுவிட்டரில் பொறுமையாக பதிவிட்டுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்.
யார் இந்த மிஸ்டர் பீன்?
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்சன் நடிப்பில் வெளியாகும் பிரபல நகைச்சுவை தொடர் தான் “மிஸ்டர் பீன்”. சரிவர வெளியுலக பழக்கம் இல்லாமல், யாருடனும் நெருங்கி பழகாமல், தனிமை வாழ்க்கையை விரும்பி, ஒரு வித ஆட்டிச குணத்துடன் வெளிப்படுத்தும் நகைச்சுவையான சீரியல் தொடரான “மிஸ்டர் பீன்” தொடர் மிக குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் ஹிட் அடித்த பிரம்மாண்ட தொடராகும். இதில் பீனாக நடித்துள்ளதை சுட்டிக்காட்டி தான் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே தலைவர்கள் மோதிக்கொண்டனர்.
இன்றைய ஆட்டம்
நியூசிலாந்து - இலங்கை
நேரம் : மதியம் 1:30 மணி
இடம் : சிட்னி
மழை வருமா?
சனியன்று வானிலைப்படி சிட்னி நகரில் 60% மழைக்கு வாய்ப்புள்ளது. குளிர்ந்த காற்று அதிகமாக வீசும் என்பதால் மைதானத்தின் தன்மை முற்றிலும் மாற வாய்ப்புள்ளது.