games

img

ஜெய் ஷாவின் கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம்

16-வது ஆசியக்கோப்பை  கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில்  அடுத்தாண்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பாகிஸ்தானில் தீவிரமாக நடை பெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட்  அணி பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்காது என பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ செயலாள ரும், ஆசியக்கோப்பை தலைவருமான ஜெய்  ஷா தன்னிச்சையாக கூறினார். மேலும் ஒன்றிய அரசாங்கம்தான் பாகிஸ்தான் பயணம் குறித்து முடிவு செய்யும் எனவும், அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என ஜெய்ஷா குறிப்பிட்டார்.  ஜெய் ஷாவின் கருத்திற்கு கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசியக் கோப்பையை நடுநிலையான இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா  கூறியிருப்பது ஆச்சரியத்துடனும், ஏமாற்ற மும் அளிக்கிறது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரி யத்துடன் எந்த விவாதமும் ஆலோசனையும் இல்லாமல், அவற்றின் நீண்டகால விளைவுகள், தாக்கங்கள் குறித்து எந்த  சிந்தனையும் இல்லாமல் இந்த கருத்து தெரி விக்கப்பட்டன. இதுபோன்ற அறிக்கை ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் உலகத்தை  பிளவுபடுத்தும் ஆற்றலை  உருவாக்கும்.  மேலும் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி நிகழ்வுகளுக்கான பாகிஸ்தானின் இந்தியா வருகையை பாதிக்கலாம். ஜெய் ஷா கருத்து குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இது வரை அதிகாரப்பூர்வ தகவல் அல்லது விளக்கத்தை நாங்கள் பெறவில்லை. அத னால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தனது வாரியத்தின் அவசர கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும்” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. பிசிசிஐ செயலாளரும், ஆசியக் கோப்பை தலைவருமான ஜெய் ஷா ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனாவார்.