மியாமி ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் அவுட்
அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வரும் டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான மியாமி ஓபன் தொடர் தற்போது இறு திக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-ஆம் சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-ஆம் இடத்தில் உள்ள கிரீஸின் சிட்சிபாஸ், அதிரடிக்கு பெற்ற ரஷ்யா வின் காச்சானோவிடம் 6-7 (4-7), 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். காச்சானோ காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், ஸ்பெயினின் அல்காரஸ், ரஷ்யாவின் மெத்வதேவ், அமெரிக்கா வின் கிறிஸ்டோபர், அர்ஜெண்டினா வின் பிரான்சிஸ்கோ ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.
அரையிறுதியில் பெகுலா
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் பெகுலா ரஷ்ய வீராங்கனை அனஸ்டாஷியா வை 4-6, 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஹாரியை ரூ.813 கோடிக்கு வாங்க மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம்
கால்பந்து உலகின் பணக்கார கிளப் அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து கிளப்) அணி, டோட்டன்ஹாம் அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான ஹாரி கேனை ரூ.813 கோடிக்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் தன்னுடைய விருப்பத்தை மட்டுமே கூறியுள்ளது. ஆனால் தற்போது விளையாடி வரும் டோட்டன்ஹாம் அணி (இங்கிலாந்து கிளப்) இதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஹாரி மீது குறி ஏன்? கால்பந்து உலகின் சிறந்த முன்னணி வீரர்களில் ஒருவ ரான ஹாரி கேன் சர்வதேச போட்டிகளில் தனது சொந்த நாடான இங்கிலாந்து அணிக்காக கேப்டன் பொறுப்புடன் விளையாடி வருகிறார். பம்பரம் போல் சுழன்று கோலடிக்கும் திறன், வீரர்களுடன் சகஜமாக பேசி அணியை வழி நடத்துவது, இக்கட்டான நேரத்தில் ஆலோசனை மூலம் போட்டியின் நிலையை மாற்றுவது என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆல்ரவுண்டர் திறனை கொண்டுள்ளதால் ஹாரியை இழுக்க மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம் தெரிவிக்கிறது.
மீண்டும் ஆபாச சைகை
அர்ஜெண்டினா கோல் கீப்பர் மார்டினெஸுக்கு சிக்கல்
அர்ஜெண்டினா - குராக்கோ (தீவு நாடு) நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியாக ஒரே ஒரு சர்வதேச ஆட்டம் அர்ஜெண்டினாவின் சாண்டியாகோ நகரில் உள்ள எஸ்டடி யோவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோலால் அர்ஜெண்டினா 7-0 என்ற கணக்கில் குராக்கோவை பந்தாடி யது. ஆட்டம் முடிந்த பின்பு பரிசு வழங்கும் விழாவின் போது அர்ஜெண்டி னா கோல் கீப்பர் எமிலியானோ மார்டி னெஸ், கத்தார் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் செய்த ஆபாச சைகை யை போன்று மீண்டும் எஸ்டடியோ மை தானத்தில் செய்தார். மார்டினெஸின் செயலை இளம் ரசிகர்கள் கொண்டாட, மற்றவர்கள் முகம் சுழித்தனர். ஒரே ஆபாச சைகையை எமிலியானோ மார்டினெஸ் அடிக்கடி செய்து வருவ தால் சர்வதேச கால்பந்து சம்மேளனம் விரைவில் விசாரணைக்கு எடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை சர்வதேச கால்பந்து சம்மேளனம் விரைவில் விசாரணை யை தொடங்கினாலே எமிலியானோ மார்டினெஸை, அர்ஜெண்டினா அணியை விட்டு தற்காலிகமாக நீக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.