இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தாயைப் பார்க்க வெள்ளியன்று தில்லி யில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ரூா்கிக்கு தானே தனியாக காரை ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கினார். படுகாயங்களுடன் தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ரிஷப் பண்ட். காயம் குண மடைந்து அணியில் உடற்தகுதியை வெளிப்படுத்த ஏறக்குறைய 1 வருடம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், பொறுப்புகள் அதிகம் இருப்பதால் ஓட்டுநரை வைத்துக் கொள்ளுங்கள் என ரிஷப் பண்டிற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறிய தாவது, “இது ஒரு பாடமாக இருக் கட்டும். நான் வளரும் கிரிக்கெட் வீரராக இருந்த போது இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்பட்டது. அன்று முதல் இருசக்கர வாகனத்தை தொடவே என் சகோதரர் என்னை அனுமதிக்க வில்லை. ரிஷப் பண்ட் நலமாக உள்ளார் என்பதை அறியும் போது கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். வேகமாக ஓடும் அமர்க் களமான கார் உங்களிடம் இருக்கலாம். ஆனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தனியாகக் கார் ஓட்டிச் செல்ல வேண்டியதில்லை. உங்க ளால் ஒரு ஓட்டுநரை வைத்துக் கொள்ள முடியும். கார் ஓட்டுவது குறித்த ஆர்வத்தை நான் அறிகிறேன். இந்த வயதில் இது இயல்பு தான். அதே சமயம் உங்களுக்கென்று பொறுப்பு கள் உள்ளன. உங்களை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்” என ரிஷப் பண்டிற்கு அறிவுரை வழங்கி யுள்ளார்.