ஜெய்ஸ்வால் சதம் : வலுவான நிலையில் இந்தியா
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கி லாந்து கிரிக்கெட் அணி தற்போது 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளை யாடி வருகிறது. குஜராத் மாநிலம் ராஜ் கோட்டில் வியாழனன்று தொடங்கிய 3-ஆவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி ரோகித் சர்மா (131), ஜடேஜா (112), சர்பிராஸ் கான் (62) ஆகியோரின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி டக்கெட்டின் (153) அபார ஆட்டத் தால் 71.1 ஓவர்களில் 319 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 126 முன்னிலை யுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொ டங்கிய இந்திய அணி முதல் இன் னிங்ஸை போல ரன் குவிக்க ஆரம்பித் தது. முக்கியமாக தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் (104) அதிரடியாக விளை யாடி சதமடித்து ஆட்டமிழந்த நிலையில், 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 51 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்து, 322 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. கில் (65), குல்தீப் (3) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
விடுமுறை நாளான ஞாயிறன்று தொடர்ந்து 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.