games

img

விளையாட்டு...

58 ஆண்டுகளுக்கு பின் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்தியா

வாயடைத்து நிற்கும் கிழக்கு ஆசிய நாடுகள்

கிரீஸ் நாட்டில் பிறந்த பேட்மிண்டன் விளையாட்டை ஆசியர்கள் மிகவும் நன்றாக விளையாடுவார்கள். முக்கியமாக இந்தியா, ஜப்பான், சீனா, சீன தைபே (தைவான்), தென் கொரியா மற்றும் கிழக்கு ஆசிய  நாடுகளான இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா,  தாய்லாந்து ஆகிய நாடுகள் ஆதிக்க நிலையில் விளையாடும். ஐரோப்பாவில் டென்மார்க், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஓரளவுக்கு நன்றாக விளையாடும். ஒற்றையர் பிரிவுகளில் மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளின் வீரர் - வீராங்கனைகள் விளையாடு வார்கள். ஆனால் இரட்டையர் பிரிவு களில் கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. இந்நிலையில், இரட்டையர் பிரிவில் கிழக்கு ஆசிய நாடுகளின் ஆதிக்க நிலைமையை ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மூலம் இந்தியா தகர்த்தெறிந்துள்ளது. துபாயில் நடை பெற்ற ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா வின்  சாத்விக் - சிராக் ஜோடி 16-21, 21-17, 21-19 என்ற செட் கணக்கில் மலேசிய ஜோடியான யு சின் - தியோ ஜோடியை வீழ்த்தி, 58 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஆசிய கோப்பை பேட்மிண்டன் தொடரில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.

இதற்கு முன்பாக 1965-ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை பேட்மிண்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில்  இந்தியா தங்கம் வென்றிருந்தது. முக்கியமாக ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆசிய கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அதிர்ந்த கிழக்கு ஆசிய நாடுகள் நரம்பு உடல்வாகை (ஒல்லியான) கொண்ட கிழக்கு ஆசிய நாடுகளின் வீரர் - வீராங்கனைகள் இரட்டையர் பிரி வில் முரட்டுத்தனமாக விளையாடு வார்கள். சோர்வடையாமல் கார்க்கை (இறகுப்பந்து) பறந்து பறந்து திருப்பு வார்கள். இதனாலேயே இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து வீரர் - வீராங்கனைகளை எதிர்கொள்ள மற்ற நாடுகள் தயங்குவார்கள். புரியும்படி சொன்னால் பேட்மிண்டன் உலகமே நடுங்கும் அளவிற்கு பயமுறுத்தி வைத்துள்ளார்கள் கிழக்கு ஆசிய நாடுகளின் வீரர் - வீராங்கனைகள்.  இந்த பிரம்மாண்ட பயமூட்டும் வரலாற்றை இந்திய ஜோடிகளான சாத்விக் - சிராக் ஜோடி ஒரே நாளில் ஆசிய பேட்மிண்டன் தொடரில் மாற்றியுள்ளார் கள். இந்திய ஜோடிகளின் வெற்றி கிழக்கு ஆசிய நாடுகளைச் சேராத நாடுகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. 

உலக உயர் செயல்திறன் தடகள தொடர் 
இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் தங்கம் வென்றார்

தடகள உலகில் முக்கிய விளையாட்டு தொடர்களில் ஒன்றான உலக உயர் செயல்திறன் தடகள தொடர் அமெரிக்காவின் சூலா விஸ்டா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர்  8.29 மீ உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். உயர் செயல்திறன் கொண்ட வீரர்கள் அதிகம் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா தங்கம் வென்றிருப்பது தடகள உலகில் புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மகளிருக்கும் உலக மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் தொடர் அடுத்தாண்டு முதல் அறிமுகம்

விளையாட்டு உலகில் ஆடவரைப் போல மகளிருக்கு அனைத்துப் பிரிவுகளிலும் உலக சாம்பியன்ஷிப் தொடர் உள்ளது. ஆனால் விபத்து காரணம் அதிகமுள்ளதால் மோட்டார் சைக்கிள், கார் பந்தயங்களில் மகளிருக்கென்று தனியாக உலக சாம்பியன்ஷிப் தொடர் கிடையாது.  இந்நிலையில், பாலின சமத்துவத்தை போற்ற உலக மோட்டார் சைக்கிள் சம்மேளனம் 2024-ஆம் ஆண்டு முதல்  மகளிருக்கும் உலக மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், உலக மோட்டார் சைக்கிள் சம்மேளனத்தின் இந்த முடிவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஐபிஎல் 2023
இன்றைய ஆட்டம்

குஜராத் - தில்லி
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத்
(சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள்,ஒடிடி - ஜியோ சினிமா)