games

img

ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் விதிமுறை

ஐபிஎல் தொடரின் 16-வது சீசனில் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. இந்த விதியின் மூலம் ஒவ்வொரு அணியும் கூடுதலாக 4 வீரர்களின் பெயர்களை ஆட்டம் தொடங்கும் முன் (டாஸ்) வெளியிட வேண்டும். இந்த நான்கு வீரர்களில் ஒருவர் இம்பாக்ட் வீரராகப் பங்கேற்கலாம். இந்த இம்பாக்ட் மாற்று வீரரை எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

பேட்டிங் : சிக்கல் 

யாருக்குப் பதிலாக மாற்று வீரர் உள்ளே நுழைகிறாரோ, வெளியேறும் வீரர் அடுத்து ஆட்டத்தின் எவ்விதத்திலும் பங்கேற்க முடியாது. மாற்று வீரர்தான் அணியில் தொடர்ந்து விளையாட வேண்டும். மாற்று வீரர் அணியில் இடம்பெற்றாலும் 11 பேர் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். 

பந்துவீச்சு : சாதகம் 

பந்துவீச்சில் இம்பாக்ட் முறை சாதகத்தை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு சென்னையின் ஜடேஜா முதலிலேயே 4 ஓவர்களை வீசி விடுகிறார். ஜடேஜாவை வெளியேற்றி விட்டு புதிய பந்துவீச்சாளரைக் களமிறக்கலாம். புதிய பந்துவீச்சாளரும் 4 ஓவர்களை வீசலாம். இதனால் பந்துவீச்சிலும் அணிகளுக்கு இம்பாக்ட் விதிமுறை நிறைய பலன்களைத் தரும்.

இம்பாக்ட் முறையால் டாஸ், ஆடுகளத்தின் தன்மை போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க  முடியும். வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும் இந்த வசதி பெரிதும் பயன்படும் என்றாலும், ஓர் அணி ஓர் ஆட்டத்தில் ஒரு இம்பாக்ட் வீரரை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இந்திய வீரர்கள் மாற்று வீரர்களாக இருப்பார்களா இல்லை  அங்கும் வெளிநாட்டு வீரர்கள் தான் இருப்பார்களா என்ற குடைச்சலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இம்பாக்ட் 4 வீரர்களாக களமிறங்குபவர் இந்திய வீரர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.  ஒருவேளை ஓர் அணியில்  3 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் இருந்தால் மாற்று வீரராக வெளிநாட்டு வீரரைத் தேர்வு செய்துகொள்ளலாம். இம்பாக்ட்  முறை நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி தொடரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.