இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி வெள்ளியன்று தொடங்கியது. போட்டி தொடங்கும் சூழ்நிலை யில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம் சனுக்கு ரேபிட் ஆண்டிஜன் பரிசோத னையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 5 நாள்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப் பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ஹமிஷ் ரூதர்ஃபோர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பை டாம் லதாம் ஏற்றுக்கொண்டார். கொரோனா பதற்றம் ஏற்பட்டாலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதை பற்றி கண்டு கொள்ளா மல் இரு அணி வீரர்களுக்கு பரிசோத னை செய்து போட்டியை நடத்தியது என் பது குறிப்பிடத்தக்கது.