games

img

விளையாட்டு... ஐபிஎல் 2023

ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா சென்னை
இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்

4 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை அணி வழக்கம் போல வலுவான நிலையில், 16-வது சீசனில் களமிறங்கியுள்ளது. நடப்பு சீசனின் தனது முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் போராடி வீழ்ந்த சென்னை அணி, 2-வது ஆட்டத்தில் லக்னோ அணியையும், 3-வது ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்நிலையில் புதனன்று நடைபெறும் தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் சென்னை அணி ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டம்
சென்னை - ராஜஸ்தான்
இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை 
நேரம் : இரவு 7:30

(சேனல் : தொலைக்காட்சி  ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  மொழி வரிசைகள்,  ஒடிடி - ஜியோ சினிமா) 

மெட்ரோ இலவசம் : ஐபிஎல் போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு புதனன்று மெட்ரோ ரயில் இலவச பயண சேவையை அறிவித்துள்ளது.

இன்னும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் கம்பீர்
பெங்களூரு மைதானத்தில் ரசிகர்களை சீண்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

15-வது லீக் ஆட்டத்தில் லக்னோ - பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. போட்டி நிறைவு பெற்ற பின் லக்னோ அணியின் ஆலோசகரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் வெற்றியை கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பெங்களூரு ரசிகர்கள் நிறைந்திருந்த பெவிலியன் நோக்கி வாயை மூடுங்கள் என்றபடி சைகை  காட்டினார். கம்பீரின் இந்த செயல்பாடு மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. காரணம் பெங்களூரு அணிக்கு ஆதரவாக இருந்த ரசிகர்கள் யாரும் லக்னோ அணியை விமர்சித்து கோஷம் எழுப்பவில்லை. தங்களது அணிக்கு ஆதரவு குரல் அளித்தனர். தோல்வி அடைந்த பின்பு சமத்துப் பிள்ளைகளாக வீட்டிற்கு புறப்பட்டனர். ஆனால் கம்பீர் ஏன்  இவ்வாறு செய்தார் என்று புரிய வில்லை. கம்பீரின் இந்த கீழ்த்தரமான செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இன்னும் பழிவாங்கும் எண்ணத்தில் கம்பீர்

கடந்த 2013-ஆம் ஆண்டு பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கும் (பெங்களூரு கேப்டன்) - கம்பீருக்கும் (கொல்கத்தா கேப்டன்) மோதல் ஏற்பட்டது. ஒருவேளை இந்த மோதலை இன்னும்  மறக்காமல் கம்பீர் பழிவாங்கும் எண்ணத்தில் ரசிகர்களிடம் இப்படி நடந்து கொண்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பழிவாங்கும் எண்ணம் இருக்கலாம். ஆனால் அதற்காக 10 வருடம் ஆன பின் இவ்வளவு நாட்கள் இருக்கலாமா?அப்பொழுது கோலி சிறுவயது இளைஞன். ஏதோ உணர்ச்சி விஷயத்தில் செய்திருப்பார். அதை காரண பொருளாக வைத்து இப்படியா செய்வது?

ஆலோசனை கூறும் நபருக்கு  மைதானத்தில் என்ன வேலை

ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது எந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டியாக இருந்தாலும் பயிற்சியாளர்கள் மைதானத்திற்கு உள்ளே வர மாட்டார்கள். ஆட்டம் முடிந்தால் அல்லது வெற்றிக்குப் பின் கைகொடுக்கும் நிகழ்வுக்கு பின்னர் பயிற்சியாளர்கள் குழு மைதானத்தில் காலடி வைப்பார்கள். இதுதான் பயிற்சியாளர்களின் நடைமுறை ஆகும். ஆனால் கம்பீர் லக்னோ அணிக்கு ஒரு ஆலோசனை கூறும் நபர்தான். எதற்காக வீரர்களுக்கு முன்பாக மைதானத்திற்கு சென்றார். ஆலோசனை கூறும் நபருக்கு ரசிகர்களிடம் வம்புக்கு இழுக்க என்ன அதிகாரம் உள்ளது. 13 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் கம்பீர் கற்றது இவ்வளவு தானா? இல்லை அரசியல் ஆதரவு (பாஜக) என்ற பெயரில் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகிறாரா?  என பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இது தவறானது

கிரிக்கெட் விளையாட்டில் ஸ்லெட்ஜிங் (வம்புக்கு இழுத்தல்) முறை வீரர் களுக்கு உரியது. விருப்பு, வெறுப்பு, மோதல் ஆகியவைகளை எதிரணி வீரர்களிடம் செய்ய ஒவ்வொரு அணி கிரிக்கெட் வீரருக்கும் உரிமை உள்ளது. ஆனால் ரசிகர்களிடம் சந்தோச கொண்டாட்டம் அதாவது ஆக்ரோஷ கொண்டா ட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்துவார்கள். அதாவது தனது ஆதரவு ரசிகர்களை நோக்கி கத்துவார்கள், ரசிகர்கள் பதிலுக்கு உற்சாகமாக பிளிறுவார்கள். சில சமயங்களில் பெவிலியன் அருகே சில ரசிகர்கள் எதிர்குரலால் சிறு சிறு  மோதல் ஏற்படும். இதுதான் கிரிக்கெட் விளை யாட்டின் வீரர்கள் - ரசிகர்கள் பிணைப்பு. ஆனால் கம்பீர் வீரர் என்ற ஒரு நிலை இல்லாமல் எதற்காக ஸ்லெட்ஜிங் செயலில் ஈடுபட்டார் என்பதே சர்ச்சை யாக உள்ளது. கடினமான போராட்ட வெற்றி  என்றால் சொந்த அணி வீரர்களுடன் கொண்டாட வேண்டும். ஆனால் எதற்காக ரசிகர்களிடம் வம்பு இழுக்க வேண்டும் என பல்வேறு சர்ச்சை எழுந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் கம்பீர் செய்தது 100% தவறானது.