games

img

ஐபிஎல் மைதான பொறுப்பாளர்களுக்கு ரூ. 1.25 கோடி பரிசு

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் குஜராத் அணி தனது அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருக்காக மகாராஷ்டிரா மாநி லம் மும்பை, புனேவில் உள்ள 4 மைதானங்கள் மற்றும் ஈடன் கார்டன் கொல்கத்தா, அகமதா பாத் ஆகிய 6 ஐபிஎல் மைதானங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மைதான பராமரிப்பாளர்களுக்கு பிசிசிஐ தரப்பில் ரூ. 1.25 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது.  மும்பை பிரபோர்ன், வான்கடே, டிஒய்  பாட்டில் மற்றும் புனே எம்சிஏ மைதானங் களுக்கு தலா ரூ.25 லட்சமும், கொல்கத்தா ஈடன் கார்டன் மற்றும் அகமதாபாத் மைதானத்திற்கு தலா ரூ12.5 லட்சமும் என மொத்தம் ரூ. 1.25 கோடி பரிசுத்தொகை அறி விக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.