games

img

கடைசி நேரத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனியே சிறந்தவர் - ரிக்கி பாண்டிங்

கடைசி நேரத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் டோனியே சிறந்தவர் என டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் குவாலிபையர் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இந்நிலையில், இதுகுறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், கடைசி நேரத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் டோனியே சிறந்தவர் எனக் கருதுகிறேன்.  ஆட்டத்தில் கடைசி நேரத்தில் பேட்ஸ்மேன்கள் அனைவருக்கும் மன அழுத்தம் தொற்றிக்கொள்ளும். ஆனால் டோனியோ எவ்வித அழுத்தம் இன்றி தனது அணிக்கு வெற்றியைக் கொடுத்துள்ளார். அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும், அவரது கடைசி நேர பேட்டிங் திறமை நிச்சயம் நினைவுகூரப்படும் என்று கூறினார்.

;